கோரம் நீ கொரோனா!!
- by admin
- 17
உலகையே உலுக்கிய
கோரம் நீ கொரோனா!
பாம்பு பல்லி தவளை
உண்டு வந்த வைரஸா
நீ கொ ரோ னா?
எத்தனை கொடூரம் நீ!
சொந்த பந்தங்களை
சொந்த வீட்டிலோ
சொந்த நாட்டிலோ
ஏன் அயல் நாட்டிலோ
அலவலாவ முடியாத
துர்ப்பாக்கிய நிலை
உன்னாலே தானே
கோரம் கொரோனா !!
சீனா தேசம் சென்றாலும்
சீர் கல்வியைக் கல்
முதுமொழி சொன்னது
நம் மூதாதையர்கள்!
இப்போ….. கல்வியல்ல
உயிர் வாழ்வதே படுதிண்டாட்டம்!!
அறிவியல் விஞ்ஞானத்தின் உச்சம்
இதில் வேறேது மிச்சம்!!
அழகு முகம் மறைக்க
அனைவருக்கும் உறவுகள்
அனைவரும் இருந்தும்
அனாதை போல் அவலம்!
அருகே இருந்தும் ஆரத்தழுவ
அரவணைக்க முடியா அவலம்!
அப்பாவி மக்களை
அநியாயமாய்த் தொலைத்திடாமல்
கொரோனா வந்த வழியே
நீயே தொலைந்திடு!
வாழட்டும் வாழ்வுப் பூக்கள்!!
பாடட்டும் வாழ்த்துப் பாக்கள்!!
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS-2
பஸ்யால
உலகையே உலுக்கிய கோரம் நீ கொரோனா! பாம்பு பல்லி தவளை உண்டு வந்த வைரஸா நீ கொ ரோ னா? எத்தனை கொடூரம் நீ! சொந்த பந்தங்களை சொந்த வீட்டிலோ சொந்த நாட்டிலோ ஏன்…
உலகையே உலுக்கிய கோரம் நீ கொரோனா! பாம்பு பல்லி தவளை உண்டு வந்த வைரஸா நீ கொ ரோ னா? எத்தனை கொடூரம் நீ! சொந்த பந்தங்களை சொந்த வீட்டிலோ சொந்த நாட்டிலோ ஏன்…