கலப்படம் அன்பிலும்?

  • 5

ஆறுதல்களுக்கு யாருமில்லையென
ஆதங்கம் கொள்வதேன்…

ஆறுதல்கூறும் பலரும்
அடைக்கலம் தருவதாய்
அநீதத்திற்கு துணைபோகலாம்…

அங்கொன்று இங்கொன்று என்று
அல்லும் பகலும்
அயராது நம் குறை கூறிக்கொண்டு
அடுத்தவர் முன் நிறை தேடி நிற்பர்…

அரைகுறையாக கேட்டு
அனாவசியமாய் இட்டுக்கட்டி
அவமானத்தில் தலைகுனிய வைத்துவிட்டு
அருகில் ஆறுதலாய் இருப்பர்…

அகங்காரத்தை தினம் தினம்
அடிமனதில் வைத்துவிட்டு
அகத்துக்கு வெளியே நிதம்
அலங்காரத்தை வெளிப்படுத்துவர்…

அமைதி தேடி
அங்குமிங்கும் அலைந்து திரிந்து
ஆதரவென்று ஒட்டிக் கொள்வோம்
அவரின் அடிநுணி அறியாது…

ஆடம்பராமாய் இருக்கையில்
அனைத்துக் கொள்வது இயல்பு,
அனைத்தும் இழந்திருக்கையில்
அணைந்தது நாம் என்று புரியும்….

அவ்வளவாய் ஏதும் சொல்ல நினைக்கவில்லை
அனுபவத்தை மெல்ல நினைத்தேன்
அகராதியில் தினம் தேடுகிறேன்
எஙகே கலப்படம் இல்லாத அன்பென்று…

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

ஆறுதல்களுக்கு யாருமில்லையென ஆதங்கம் கொள்வதேன்… ஆறுதல்கூறும் பலரும் அடைக்கலம் தருவதாய் அநீதத்திற்கு துணைபோகலாம்… அங்கொன்று இங்கொன்று என்று அல்லும் பகலும் அயராது நம் குறை கூறிக்கொண்டு அடுத்தவர் முன் நிறை தேடி நிற்பர்… அரைகுறையாக…

ஆறுதல்களுக்கு யாருமில்லையென ஆதங்கம் கொள்வதேன்… ஆறுதல்கூறும் பலரும் அடைக்கலம் தருவதாய் அநீதத்திற்கு துணைபோகலாம்… அங்கொன்று இங்கொன்று என்று அல்லும் பகலும் அயராது நம் குறை கூறிக்கொண்டு அடுத்தவர் முன் நிறை தேடி நிற்பர்… அரைகுறையாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *