தாயே உனக்காக

  • 14

சொட்டுச் சொட்டாய்
உன் உயிரை உரைத்து
என்னைப் பெற்றெடுத்தாய்!!!
கடவுளிடமிருந்து என்னை வென்றடுத்தாய்…

ஒன்றல்ல இரண்டல்ல
பத்து மாதம் ஆகியும் என்னை பத்யிரமாய்
சுமந்து கொண்டாய்…
பத்திரமாத்து தங்கமாய் நீயே என்னைப்
பெற்றுக் கொண்டாய்…

உன் உதிரத்தில் தாய்ப்பாலை சுரக்க வைத்தாய்!
உன் இரக்கத்தில் தாய்மை தன்னை பருகக் கொடுத்தாய்!

அன்பென்னும் ஆலயத்திலே
என்னை அழகாக ஆராட்டினாய்…
இனிய தாலாட்டு எனும் பாட்டிலே
என்னை சிறப்பாக சீறாட்டினாய்…

தியாகங்கள் எனும் திரைப்படத்தை
திரையரங்கில் ஏற்றினாய்!
தினமொரு பாத்திரம் பெற்று
என் இன்பத்தை மெரூகூட்டினாய்!

சுமை என்று ஒதுக்கிவிடாமல்
ஒத்துழைப்புடன் குரல் எழுப்பினாய்…
சுவர்க்கத்தின் வாயிலிலும்
எனக்காக கையை நீட்டியே வைக்கிறாய்…

இத்தனை கோடி பரினாமங்கள்
ஏன் எனக்காக தோற்றுவித்தாய்?
இத்தனை தியாகங்கள
ஏன் எனக்காக நீ புரிந்தாய்?

கடவுளிடம் வரம் பெற்றல்லவா என்னை
பத்து மாதம் நீ சுமந்தாய்?
அதே கடவுளிடமே நானும் வரம் கேட்கிறேன்!
உன்னை என் மனதில்
பத்திரமாய் சுமக்க…

தாயே நீ பெற்ற உன் பிள்ளை
கடவுள் தந்த கைப்பிள்ளை…
என் தாயே என் பிரார்த்தனைகள்
யாவும் என் தாயே என்றும் உனக்காக…

H.F. Badhusha
SEUSL

சொட்டுச் சொட்டாய் உன் உயிரை உரைத்து என்னைப் பெற்றெடுத்தாய்!!! கடவுளிடமிருந்து என்னை வென்றடுத்தாய்… ஒன்றல்ல இரண்டல்ல பத்து மாதம் ஆகியும் என்னை பத்யிரமாய் சுமந்து கொண்டாய்… பத்திரமாத்து தங்கமாய் நீயே என்னைப் பெற்றுக் கொண்டாய்……

சொட்டுச் சொட்டாய் உன் உயிரை உரைத்து என்னைப் பெற்றெடுத்தாய்!!! கடவுளிடமிருந்து என்னை வென்றடுத்தாய்… ஒன்றல்ல இரண்டல்ல பத்து மாதம் ஆகியும் என்னை பத்யிரமாய் சுமந்து கொண்டாய்… பத்திரமாத்து தங்கமாய் நீயே என்னைப் பெற்றுக் கொண்டாய்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *