குரங்கு மனசு பாகம் 63
- by admin
- 11
அன்றிரவு தன்னவள் இல்லா தாய் வீடு அதீகிற்கு நரகமாக, சர்மியின் நிலையும் பெரும் சோகத்திலேயே முடிந்து போனது.
“எப்படா விடிந்து விடுவது?”
என்றிருந்தவனாய் அவசர அவசரமாய் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு கிழம்பி வந்த அதீகின் ஏக்கம் அத்தாய்க்கு புரியாமலில்லை, இருந்தும்
“ஏன்டா இன்னம் கொஞ்சம் தூங்க இருந்தே? இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?”
“அதுவந்து, இல்லம்மா… ஆஹ் இன்னக்கி கொஞ்சம் சீக்கிரமா ஆபீஸ் போகனும், வந்த போல தங்கினதே.. வீடு போய் ரெடி ஆவிட்டு போகனும் அதுதான்…” ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டியதாய் போன அதீகின் நிலை உண்மையில் பாவம் தான்.
“ஹ்ம்ம் சரிடா, கவனமா போய் வா…”
“சரிம்மா..” சொல்லிக் கொண்டே வேகமாய் கிளம்பியவன் மீது கோவம் ஏற்படினும் அப்பொழுதைக்கு காட்டிக் கொள்ளவில்லை அவள்.
“சர்மி நான் உன்கிட்ட தான் வந்துட்டு இருக்கன், ஏன்ட உசுர பார்க்கத் தான்மா வந்துட்டு இருக்கன்” வாயால் முனங்கிக் கொண்டே வாகனம் இயக்கியவன் அகம் நொந்து கண்கள் குளமாக, எவ்வளவு வேகமாய் வேண்டுமோ அந்தளவு அவசரமாய் வாகனத்தை செலுத்தி வீட்டை அடைந்தான்.
“சர்மி… சர்மிம்மா”
“அவள எழுப்பாதிங்க மகன்…” கேள்வியோடு மாமியாரை நோக்க,
“ராத்திரி முழுக்க விழிச்சி இருந்தாங்க, ஏதோ நெஞ்சுக்குள்ள நோவுறன்னு சொல்லிட்டு காலையில தான் தூங்கப் போனா…”
“ஏன்? ஏன் ராத்திரி எல்லாம் தூங்கல்ல” பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை ராபியா.
அருகில் கைக்குழந்தையை அணைத்தவளாய் அயர்ந்து தூங்கியிருந்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ தப்பாய்த் தோன்றியது.
“நோ… நோ.. அப்படி ஒன்னும் இருக்காது”
தன்னவள் அருகில் செல்ல தயக்கமாய் இருந்தாலும், அவனையும் மீறி வந்த கண்ணீர் துளிகள் ஏதோ உண்மையை அவனுக்கு சொல்லாமல் சொல்லிச் சென்றது.
கதை தொடரும்…
Aathifa Ashraf
அன்றிரவு தன்னவள் இல்லா தாய் வீடு அதீகிற்கு நரகமாக, சர்மியின் நிலையும் பெரும் சோகத்திலேயே முடிந்து போனது. “எப்படா விடிந்து விடுவது?” என்றிருந்தவனாய் அவசர அவசரமாய் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு கிழம்பி வந்த…
அன்றிரவு தன்னவள் இல்லா தாய் வீடு அதீகிற்கு நரகமாக, சர்மியின் நிலையும் பெரும் சோகத்திலேயே முடிந்து போனது. “எப்படா விடிந்து விடுவது?” என்றிருந்தவனாய் அவசர அவசரமாய் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு கிழம்பி வந்த…