பாரமானதில்லை எனக்கு நீ

  • 18

கண்களில் கண்ணீர்
திவளையாக – இதயமோ
குவளையானது…

கடலிலிருந்து எழுந்தாலும்
மழை நீர் உப்பாய் வீழ்வதில்லை…
வலிகளை தந்தாலும் – நீ
அன்பை தவிர வேறொன்றும் இல்லை
என்னுள்…

இரவுக்கு நிலவும்
எனக்கு நீயும்
பாரமானதில்லை என்றும்…

உனக்கென காத்திருக்கும்
விழிகளுக்கு-நீ தந்த
வலிகள் பாரமில்லை
இதயத்திற்கு…

பாத்திமா அ(F)ப்ரின்
அட்டாளைச்சேனை

கண்களில் கண்ணீர் திவளையாக – இதயமோ குவளையானது… கடலிலிருந்து எழுந்தாலும் மழை நீர் உப்பாய் வீழ்வதில்லை… வலிகளை தந்தாலும் – நீ அன்பை தவிர வேறொன்றும் இல்லை என்னுள்… இரவுக்கு நிலவும் எனக்கு நீயும்…

கண்களில் கண்ணீர் திவளையாக – இதயமோ குவளையானது… கடலிலிருந்து எழுந்தாலும் மழை நீர் உப்பாய் வீழ்வதில்லை… வலிகளை தந்தாலும் – நீ அன்பை தவிர வேறொன்றும் இல்லை என்னுள்… இரவுக்கு நிலவும் எனக்கு நீயும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *