புலரும் முன்

  • 8

இரத்த ஊற்றிலே துளிர்விடும்
ஒவ்வொரு துளியும்
நாடி நரம்பெல்லாம்
தேடி ஓடும் வழியிலே
வெறும் சதைப்பிண்டமாக
நீ ஓருயிரைக் கண்டாயா?

சோதயையும், சோகமும், இழப்பும்
பீதியுமாய் உலகமே ரணககளமாய்
சத்தமின்றி வாடும் வாட்டத்தை
ஒவ்வொரு தரவையும் பதிவேற்றி
பதபதைக்கும் உள்ளத்துடன்
நொருங்கிப்போய் கண்களிலே
மரணபயத்துடன் நாளிகைகள்
கழிகின்றதேனோ

இன்னுயிரைக்காக்க வகை செய்யும்
மறுவுலக்காட்சி தனை
கண்முன்னே கொண்டு வந்து காட்டுவதும்
திடீரென தன் பிடி கொண்டு பிடித்து
அவன் பாடம் உணர்த்த எத்தனித்தானா?

எப்பேதமும்மின்றி வேரருத்து விட்ட மரமாய்
அவனுடன் தொடர்ந்த ஆவணங்களையும்
சுடலையில் பொசுக்கி
நரகின் வெப்பத்தை முன்னோட்டம் காட்டுகிறாய்

கோரத்தாண்டவமாடும் கொடூர கொரோனா
நெருப்பாய்ப்பொசுக்கும்
திரை விளையாட்டாய்ப்போனதே
ஓய்ந்த ரவைகளின் துளைச்சல்களின்
சத்தங்களும் ஓய்ந்து
எம் உம்மத்தின் அடையாளமாயிருந்த
அகதிகள் எனும் நிலை பொதுமயமானது.

வல்லரசுகளின் முறிந்த முதுகெழும்பும் முறிந்தது.
படிப்பினை பெற்ற கூட்டத்தில்
அவனளவில் திரும்புவோமாக
விழிநீர் சிந்தி ஈமானிய புரட்சி செய்வோம்

கவசம் அணிவோம் எம் ஆயுதமாய்
முகத்திற்கு மட்டுமல்ல
ஏந்திடும் கரங்கள் நிறைந்திடட்டும்
அதுவே உன் கப்ருக்கு ஒளியாகும்
அருள்மறை உன் அகக்கண்களை திறக்கட்டும்
குளிர்நீர் உன் உன் இதயக்கறைகளை கழுவட்டும்

வீடடங்கிக்கிடந்த போதும்
வெறும் வயிற்றுடன் பறந்தபட்சியாய்
உண்டி நிரம்ப வைத்தவனை
மிளிரும் அணிகலன்களாய்
நற்பண்புகளால் அலங்கரி
இறைவனின் நிழலில் தரை முத்தமிட்டும்
தேடலில் திங்கள் புலரும் முன்

பின்த் பஸ்லூன்

[cov2019]

இரத்த ஊற்றிலே துளிர்விடும் ஒவ்வொரு துளியும் நாடி நரம்பெல்லாம் தேடி ஓடும் வழியிலே வெறும் சதைப்பிண்டமாக நீ ஓருயிரைக் கண்டாயா? சோதயையும், சோகமும், இழப்பும் பீதியுமாய் உலகமே ரணககளமாய் சத்தமின்றி வாடும் வாட்டத்தை ஒவ்வொரு…

இரத்த ஊற்றிலே துளிர்விடும் ஒவ்வொரு துளியும் நாடி நரம்பெல்லாம் தேடி ஓடும் வழியிலே வெறும் சதைப்பிண்டமாக நீ ஓருயிரைக் கண்டாயா? சோதயையும், சோகமும், இழப்பும் பீதியுமாய் உலகமே ரணககளமாய் சத்தமின்றி வாடும் வாட்டத்தை ஒவ்வொரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *