எனதான தனிமை
- by admin
- 11
கால்களில் லாடங்களோடும்
கணத்த கனவுகளோடும் நகரும்
நீண்ட தூரப் பயணத்தின்
ஒரு சந்திப்பு நீ…
சில காலம்
அருகில் யாரும் இல்லாது
நான் மட்டுமாய் புலம்பிய வேளை
என் அத்தனை அசைவுகளையும்
ரசித்தவன் நீ
என்னோடு நீ இருந்த
தருணங்களிலெல்லாம்
என் முக சிரிப்பொலி
மங்கி நான் கண்டதில்லை
என் உள்ளத்து நிம்மதிப் பை
நிரம்பி இருந்தது
என் செயல்களில்
திருப்தி ஊடுருவி இருந்தது
எல்லோரும் என்னை நேசித்திருக்க
சேர்ந்து பழக ஆசை வைத்திருக்க
உணர மட்டும் முடிந்த உன்னை
உருவம் காணாது நேசித்தவள் நான்
உன்னை உணர்ந்ததே இல்லை
இன்று சிரிக்கிறேன்
என்னை அறியாமலே
கண்ணீரையும் காண்கிறேன்
எல்லா உறவுகளும் என்னோடு
இருக்கும் போது
சுவர்க்கத்தின் ஒரு துளி
இன்பத்தில் களிக்கிறேன்
மறு கணமே முகம் சோர்கிறேன்
உன்னை இப்போது தான்
முதல் முறையாக உணர
முடிந்திருக்கிறது என்னால்
ஏரூர் நிலாத்தோழி
ஏறாவூர்
இலங்கை
கால்களில் லாடங்களோடும் கணத்த கனவுகளோடும் நகரும் நீண்ட தூரப் பயணத்தின் ஒரு சந்திப்பு நீ… சில காலம் அருகில் யாரும் இல்லாது நான் மட்டுமாய் புலம்பிய வேளை என் அத்தனை அசைவுகளையும் ரசித்தவன் நீ…
கால்களில் லாடங்களோடும் கணத்த கனவுகளோடும் நகரும் நீண்ட தூரப் பயணத்தின் ஒரு சந்திப்பு நீ… சில காலம் அருகில் யாரும் இல்லாது நான் மட்டுமாய் புலம்பிய வேளை என் அத்தனை அசைவுகளையும் ரசித்தவன் நீ…