தாம்பத்திய உறவும் மனநிலையும்

  • 13

காமத்தை சதைகளோடு மட்டுமே பார்க்கும் மனப்பாங்கு வாய்த்தால் மனிதனை உயிர்ப்பிக்கும் உள்ளார்ந்த மெல்லிய உணர்வுகள் அவனுக்குள் வரண்டு விடுகின்றன. எனவே, அத்தகைய பூமியில் மணம் வீசும் அன்புப் பூக்கள் உருவாக வாய்ப்பில்லை.

சதைகளோடு மல்லுக்கட்டுகின்ற கலாசாரத்துக்குள் அடிமைப்பட்டு வாழுகின்றவனிடம் பெண் குறித்து புரிதலுடைய உணர்வுகளையோ மனிதாபாமான விழுமியங்களையோ எதிர்பார்க்க முடியாது. பெண் என்பவள் ‘போதையூட்டும் வஸ்து’ என்ற புலக்காட்சியே அவனில் குடிகொண்டிருக்கும். அதனாலேயே இன்னும் பல பெண்கள் கட்டிலை விட்டும் கரையேற முடியாத அவஸ்தையில் தொடர்ந்தும் வாழ்கின்றனர்.

நாள் முழுவதுமாக ஈடுபடுகின்ற பலதரப்பட்ட வீட்டுப் பணிகளால் அவள் களைப்பாக இருக்கிறாளா..? மனரீதியாக தாம்பத்திய உறவுக்கு அவள் தயாராக இருக்கிறாளா..? மாதவிலக்கு ஏற்படவிருக்கும் அவஸ்தையில் அவள் உழல்கிறாளா…? மாதவிலக்கு நிற்கும் பருவத்தில் ஏற்படும் மாற்றத்தின் தொய்வால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவள் உருக்குழைந்து அல்லலுறுகிறாளா..? கருத்சிதைவினால் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போய், ஏற்பட்ட மனச் சோர்வால் அவள் பாதிப்பு அடைந்தவளா.,? பிரவசத்திற்குப் பின்னான உளப் பாதிப்புகளில் அவள் வீற்றிருக்கிறாளா…? குடும்பத்தின் அல்லது சமூகத்தின் அவமானங்களுக்கு மத்தியில் இன்னும் தாய்மை அடையவில்லை என்ற ஏக்கத்தோடு ஒதுங்கி, ஒடுங்கி வாழும் நிலையில் அவள் உள்ளவளா..? கர்ப்ப காலத்தின் இயல்பு மாற்றத்தினால் உடலாலும் மனதாலும் பல அசெளகரியங்களை சந்தித்துக் கொண்டு, அவள் போராடிக் கொண்டிருக்கிறாளா..? தனது குழந்தைக்கு தாய்ப்பால் இல்லையே என்ற ஏமாற்றத்தால் சோர்வடைந்துள்ளாளா..? பாலுட்டும் காலத்தில் ஏற்படும் அசதி காரணமாக தூக்கத்திற்கும் பலமிழந்த நிலைக்கும் உள்ளாகி சோர்வடைந்து இருக்கிறாளா .? வயதுக்கு வந்த பிள்ளைகள் உள்ளதால் வீட்டுக்குள் ஓர் அசெளகரியத்தை எதிர் கொண்டு வெட்கத்தால் அவள் சஞ்சலப்படுகிறாளா..?

சதைகளோடு உல்லாசம் கொள்ளும்… புரண்டு எழும்பும் மனித மிருகங்களில் மேற்போந்த கேள்விகள் எழுவதும் அது குறித்த சிந்தனை ஏற்படுவதும் சந்தேகமே. இனி எப்படி புனிதமான தாம்பத்யம் சந்தோஷமாக அமையும்…? குடும்ப உறவு சீர்பெறும்..? மனோநிலை இல்லாத நிலையில் ஏது இன்பம்..?

மேற்போந்த அவஸ்தைகளில் உழன்று கொண்டு இருந்தாலும் பல மனைவிகள் தங்கள்கணவன்மார்களை சந்தோஷப்படுத்துவதற்காய் பாய் விரிப்பார்கள். அனைத்தையும் சகித்துக் கொண்டு போலியாக பலர் தங்களது உணர்ச்சிகளை காட்ட முடியும். இன்னும் பலர் சடலாமாக சாய்ந்திருக்கக் கூடும். ஆனால் காலப் போக்கில் அச் செயல் மனச்சோர்வுக்கு அவர்களை ஆளாக்கிவிடுவது இயல்பு. எனவே, ஆண்களுக்கு பாலுணர்வு நாட்டம் கூடுதலாக இருப்பது இயல்பான போதிலும் கணவன்மார்கள் தங்களது மனைவிகளை சக உயிரியாய் மதித்து மனிதாபமானத்தோடு நடந்து கொள்வது, அவர்களது உணர்வுகளையும் இயல்பு நிலைகளையும் மதித்து, அனுசரித்து நடப்பது, பல காரணங்களினால் ஏற்படும் தொய்வு நிலையில் மனைவிகளுக்கு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருப்பது, அவர்களது மனநிலைகளை கருத்திற் கொண்டு செயற்படுவது என்பது அதி முக்கியமான விடயங்களாகும்

அவ்வாறான மனநிலை கருத்திற் கொள்ளப்படாத விடத்து குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டு, விவாகரத்தில் வந்து நிற்கின்ற அவலம் தோன்றுவது தவிர்க்க முடியாது. பல விவாகரத்து வழக்குகளை அவதானிக்கும் போது அதன் பின்புலத்தில் இந்த விடயம் ஒரு கோர முகத்தில் வீற்றிருப்பதைக் காணலாம்.

எம். ரிஸான் ஸெய்ன்.
உளநல ஆலோசகர்


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


காமத்தை சதைகளோடு மட்டுமே பார்க்கும் மனப்பாங்கு வாய்த்தால் மனிதனை உயிர்ப்பிக்கும் உள்ளார்ந்த மெல்லிய உணர்வுகள் அவனுக்குள் வரண்டு விடுகின்றன. எனவே, அத்தகைய பூமியில் மணம் வீசும் அன்புப் பூக்கள் உருவாக வாய்ப்பில்லை. சதைகளோடு மல்லுக்கட்டுகின்ற…

காமத்தை சதைகளோடு மட்டுமே பார்க்கும் மனப்பாங்கு வாய்த்தால் மனிதனை உயிர்ப்பிக்கும் உள்ளார்ந்த மெல்லிய உணர்வுகள் அவனுக்குள் வரண்டு விடுகின்றன. எனவே, அத்தகைய பூமியில் மணம் வீசும் அன்புப் பூக்கள் உருவாக வாய்ப்பில்லை. சதைகளோடு மல்லுக்கட்டுகின்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *