காதல் சிதைந்து போச்சு

  • 25

மங்கை ஏங்குகிறாள்
கண்ணீர் சிந்துகிறாள்.
விட்டுப் போன உறவை எண்ணி
செத்துப் போன அவளின் காதலை எண்ணி!
மெளனமாய் தினமும் கதருகிறாள்!

வடித்து வடித்து கண்ணீரும் வற்றிப் போயாச்சி
என் கற்பிற்கும், காதலுக்கும் யார் சாட்சி??
இறைவனும் மெளனமாய் இருக்கிறான் இல்லை போல அவனுக்கும் மனசாட்சி!

இவள் ஏக்கம் இன்னும் தொடர்கிறது
பிரிந்தவனை அவளுடன் இணைப்பதற்கு!
தலையணையும், அறை சுவரும் மங்கையிவள்
மனக்கலக்கத்திற்கு ஒரு துணையாய்
எத்தனை நாட்கள் இப்படி நீளுமோ?

சீவாத தலைமுடியும் மங்கை
சிந்துகின்ற கண்ணீரும்
ஊணில்லாமல் இவள் உடலும்
ஊனமாய் போன இவள் மனதும்!
நீங்கிச் சென்ற அவள் காதலன் நீண்டநாள்
கழிந்தேனும் கட்டியணைப்பானா?
என ஏங்குகிறது

தனிமையில் தானாக உளருகிறாள்.
கற்பனையிலே அவனுடன் வாழுகிறாள்!
இங்கே இவளுக்கு பிள்ளையும் பிறந்தாச்சு!
ஆனால்
துணைவன் பிரிந்து நீண்டநாள் ஆயாச்சு!
பாவம் இவள் பைத்தியமானாள்!
நீங்காத ஏக்கத்தால் தனிமைப்படுத்தி
வைக்கப்பட்ட பித்துப் பெண்ணாய் ஆனாள்!

ஆறுதல் இல்லாமல் தனிமையில் நெஞ்சில்
கையடித்து அழும் அவளை
சிறிது சந்திக்கச் சென்றால்
கதறி கண்ணீர் வடித்து அழுவாள்
பதறி வாயில் அருகே
அவன் வருகைக்காக செல்வாள்.
பாவம் என் தோழி!
இன்றும் வரவில்லையே
எனக் கூறியே
மீண்டும் என் மடியில் சாய்ந்து அழுவாள்!

அய்யோ! எனக்கு என்ன ஆச்சு?
என் காதல் என்னை விட்டு எங்கே போச்சு?
என் காதலன் என்னை விட்டுப்
பிரிந்து நெடுநாள் ஆச்சு!
என் நெஞ்சில் அனைத்த படியே
அவளுக்கு சொல்வேன்.

அதுதானடி என் தோழி
உன் காதலன் உன்னை விட்டுச் சென்று
நெடு நாள் ஆச்சு!
உன் காதல் சிதைந்து போச்சு!
அய்யோ! – என் தோழிக்கு என்ன ஆச்சு?

Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

மங்கை ஏங்குகிறாள் கண்ணீர் சிந்துகிறாள். விட்டுப் போன உறவை எண்ணி செத்துப் போன அவளின் காதலை எண்ணி! மெளனமாய் தினமும் கதருகிறாள்! வடித்து வடித்து கண்ணீரும் வற்றிப் போயாச்சி என் கற்பிற்கும், காதலுக்கும் யார்…

மங்கை ஏங்குகிறாள் கண்ணீர் சிந்துகிறாள். விட்டுப் போன உறவை எண்ணி செத்துப் போன அவளின் காதலை எண்ணி! மெளனமாய் தினமும் கதருகிறாள்! வடித்து வடித்து கண்ணீரும் வற்றிப் போயாச்சி என் கற்பிற்கும், காதலுக்கும் யார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *