கைகளும் கண்ணீர் சிந்தும்

காகிதக் கப்பல்
கண்ணாடி அலைகளைத் தாண்டி
கரைசேர தவிப்பது போல்தான்
என் மனதில் உள்ள
உன் நினைவுகளைத் தாண்டி
விழிகள் உறங்கத் தவிக்கிறது

நினைவுக் கதிரவனை
இரவின் கதிர்வீச்சில்
இணைத்து விட்டாய்
உலகில் இது ஒன்றுதான்
இறுதி மூச்சுக்காற்றெனத்
தோன்றுகிறது
இந்த நொடி இருக்கும்
சுவாசக் காற்று

மணித்தியாளத்தின்
நெருக்கத்தின் மத்தியில்
உறக்கத்தை தேடித் தவிக்கிறேன்
உன் நினைவுகளில்
அவை புதைந்து போனதால்

கைகளும் கண்ணீர் சிந்தும்
காதல் கொண்டால்
கவிதை வரிகளில்

ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை -08

காகிதக் கப்பல் கண்ணாடி அலைகளைத் தாண்டி கரைசேர தவிப்பது போல்தான் என் மனதில் உள்ள உன் நினைவுகளைத் தாண்டி விழிகள் உறங்கத் தவிக்கிறது நினைவுக் கதிரவனை இரவின் கதிர்வீச்சில் இணைத்து விட்டாய் உலகில் இது…

காகிதக் கப்பல் கண்ணாடி அலைகளைத் தாண்டி கரைசேர தவிப்பது போல்தான் என் மனதில் உள்ள உன் நினைவுகளைத் தாண்டி விழிகள் உறங்கத் தவிக்கிறது நினைவுக் கதிரவனை இரவின் கதிர்வீச்சில் இணைத்து விட்டாய் உலகில் இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *