பேரழகு

  • 11

நேசித்தல் அழகு!
நேசிக்கப்படுதல் பேரழகு!
முகம் மலர்தல் அழகு!
அகம் மகிழ்ந்து முகம் மலர்தல்
கொள்ளை அழகு!

நெஞ்சுடைந்து சதா
நம்பிக்கைகளும்
தன்னைத் தானே
தகனித்து
தவ்ர் குகையில்
தடுமாறிய
அபூபக்ரை (ரழி) நோக்கிட்ட
நபியின் (ஸல்)
நன்மொழி
“கவலைப்படாதே!”
தேற்றினார் நாயகம் (ஸல்)
தேறினார் அபூபக்கர் (ரழி)

புன்னகை அழகு!
சந்தோஷம் பேரழகு!
மகிழ்ச்சி அழகு!
மனநிறைவு கொள்ளை அழகு!

இழப்பதற்கு ஏதுமின்றி
இழப்புக்களே சளைக்குமளவு
இழந்து விட்ட
மூஸாவை (அலை)
நோகாமல்
நொறுங்காமல்
அமைதியாய் நோக்கிட்ட
ஷுஐபின் (அலை)
ஆறுதல் வார்த்தை
“பயப்படாதே…!”
தேற்றினார் ஷுஐப் (அலை)
தேறினார் மூஸா (அலை)

எமதான வாழ்தல் அழகு
பிறரை வாழ்த்துதல் பேரழகு
துன்பம் துறத்தல் அழகு
துன்புறுவோர் துயர்
துடைத்தல் கொள்ளை அழகு

முன்னால்
அலைகளின் படையாம்
ஆழ்கடல்
பின்னால்
அரக்கன் பிர்அவ்னின் படையாம்
ஆள்பலம்
இடை நடுவே
இடர் பூண்டு
இடிந்துபோன
முஃமின்களை நோக்கிட்ட
மூஸாவின் (அலை)
வாசகம்
“நம்பிக்கை இழக்காதீர்கள்”
தேற்றினார் மூஸா(அலை)
தேறினர் முஃமின்கள்

நெருக்கடியால் தினம்
நொறுங்கிடும்
நெஞ்சங்களின்
துயரங்களுக்குத்
துயர் துடைப்பானாய்
திகழ்தல்
திடப்படுத்துதல்
தீன் வழி சுமந்த
நபிமார் செயலே.

தன் நிலையால்
முன் நிலைகள்
புன்னகைத்தல்
எந் நிலையிலும்
பேரழகு!

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
B.A (Hons) Ⓡ _ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.

நேசித்தல் அழகு! நேசிக்கப்படுதல் பேரழகு! முகம் மலர்தல் அழகு! அகம் மகிழ்ந்து முகம் மலர்தல் கொள்ளை அழகு! நெஞ்சுடைந்து சதா நம்பிக்கைகளும் தன்னைத் தானே தகனித்து தவ்ர் குகையில் தடுமாறிய அபூபக்ரை (ரழி) நோக்கிட்ட…

நேசித்தல் அழகு! நேசிக்கப்படுதல் பேரழகு! முகம் மலர்தல் அழகு! அகம் மகிழ்ந்து முகம் மலர்தல் கொள்ளை அழகு! நெஞ்சுடைந்து சதா நம்பிக்கைகளும் தன்னைத் தானே தகனித்து தவ்ர் குகையில் தடுமாறிய அபூபக்ரை (ரழி) நோக்கிட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *