பெருநாள் ஷாப்பிங் செய்ய உத்தேசமா?
- by admin
- 12
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தவொரு செய்தியையும் காணமுடியவில்லை.
கையிருப்பில் உள்ள ஒரு புது ஆடையை அணிந்து கொள்வது தான் சரியான நபி வழியாகும் 👌
சரி, உடுப்பெடுத்தே தான் ஆவனுமா?
வெளியே சென்று, நாம் விலை கொடுத்து வாங்க இருப்பது ஆடை மாத்திரமல்ல ஆபத்தையும் தான். மாத்திரமின்றி, தணிந்து வரும் கொரோனாவிற்கு உரமளித்து உறவுகளை இரையாக்கி நாம் இறை சாபத்திற்கும் ஆளாகிட வாய்ப்பிருக்கிறது.
“அநியாயமாக ஒரு மனிதரை கொல்பவர் முழு மனித சமுதாயத்தையும் கொலை செய்தவராவார்” – அல்குர்ஆன்
அன்புள்ள நண்பர்களே, பெரியார்களே, தாய்மார்களே!
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் ஏற்கனவே இனவாதத்தீயில் எரிந்து வெந்து கொண்டிருக்கும் இந் நிலையில் மேலும் மேலும் எண்ணெய் ஊற்றும் வகையறா செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்ந்து கொள்வதே உசிதம்.
இது போன்ற எமது செயற்பாடுகளே சதுர போன்ற இனவாதிகளின் பசிக்கும் விருந்தாக அமைந்துவிடுகின்றன.
எமது செயற்பாடுகளினால் ஒருபோதும் எமது சமுதாயம் பாதிப்படைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போம்.
இன்ஷா அல்லாஹ்
Stop Eid Shopping
யாஸிர் அனீப்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தவொரு செய்தியையும் காணமுடியவில்லை. கையிருப்பில் உள்ள ஒரு புது ஆடையை அணிந்து கொள்வது தான் சரியான நபி…
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தவொரு செய்தியையும் காணமுடியவில்லை. கையிருப்பில் உள்ள ஒரு புது ஆடையை அணிந்து கொள்வது தான் சரியான நபி…