கொடிய வறுமையின் கோரமான மறுமுகம்
- by admin
- 22
பிரிந்த உயிர்கள்
அறியத்தந்த செய்தி என்ன
கொடிய வறுமையின்
கோரமான மறுமுகமே
கொரோனாவின் கோரத்தாண்டவம்
எங்கள் தன்மானத்தையும்
தன்னம்பிக்கையுடன் சேர்த்து -உயிர்
வாழ்தலுக்கான உரிமையும்
பறித்துக் கொண்டது பரிதாபமாக.
சேர்த்து வைத்திருந்த
சில்லறைகள் தீர்ந்து போக
ஒரு வேளை சோறுதானே
இந்த கதைகளின் சாராம்சம்.
அன்றாடம் கூலிக்குள்
வாழ்க்கை திண்டாட்டம்
ஊரடங்கி கிடக்கிறது
நாங்கள் ஒருவேளை
சோற்றுக்கு மன்றாட்டம்
இனவாதிகளுக்கு கொண்டாட்டம்
கொரோனா
கோரத்தாண்டவம்
இன்னும்
என்னென்ன சோதனைகள்
நாச்சியாதீவு
எம். சஹ்ரின் அஹமட்
பிரிந்த உயிர்கள் அறியத்தந்த செய்தி என்ன கொடிய வறுமையின் கோரமான மறுமுகமே கொரோனாவின் கோரத்தாண்டவம் எங்கள் தன்மானத்தையும் தன்னம்பிக்கையுடன் சேர்த்து -உயிர் வாழ்தலுக்கான உரிமையும் பறித்துக் கொண்டது பரிதாபமாக. சேர்த்து வைத்திருந்த சில்லறைகள் தீர்ந்து…
பிரிந்த உயிர்கள் அறியத்தந்த செய்தி என்ன கொடிய வறுமையின் கோரமான மறுமுகமே கொரோனாவின் கோரத்தாண்டவம் எங்கள் தன்மானத்தையும் தன்னம்பிக்கையுடன் சேர்த்து -உயிர் வாழ்தலுக்கான உரிமையும் பறித்துக் கொண்டது பரிதாபமாக. சேர்த்து வைத்திருந்த சில்லறைகள் தீர்ந்து…