நீதி கிடைக்குமா?

  • 6

மூச்சு
வழி கேட்கிறது,
வழிவிடு.

கத்தினேன்
கதறினேன்!?

உன் முழங்கால்
என்மீது அராஜகம் செய்தது,
உன் பலம்
என் பலயீனத்தை‌
பயன்படுத்தியது.

பசியினால்
பாதையோரம்
இருந்தவனை,

உன்
இனப்பசிக்கு
இரையாக்கி விட்டாயே?!

என்னை
விட்டு விடு என்றலறும்
சத்தங்களை
அதிகாரமெனும் ஆடை
அடக்கி விட்டதே!

அநியாயமாக கொல்லப்பட்ட
என் ஆன்மாவுக்கு
நியாயமான
நீதியாவது கிடைக்குமா!?

Mushthaq Mifthar
Kurunegala.

மூச்சு வழி கேட்கிறது, வழிவிடு. கத்தினேன் கதறினேன்!? உன் முழங்கால் என்மீது அராஜகம் செய்தது, உன் பலம் என் பலயீனத்தை‌ பயன்படுத்தியது. பசியினால் பாதையோரம் இருந்தவனை, உன் இனப்பசிக்கு இரையாக்கி விட்டாயே?! என்னை விட்டு…

மூச்சு வழி கேட்கிறது, வழிவிடு. கத்தினேன் கதறினேன்!? உன் முழங்கால் என்மீது அராஜகம் செய்தது, உன் பலம் என் பலயீனத்தை‌ பயன்படுத்தியது. பசியினால் பாதையோரம் இருந்தவனை, உன் இனப்பசிக்கு இரையாக்கி விட்டாயே?! என்னை விட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *