மன அழுத்தம் ஒரு குறுகிய பார்வை
- by admin
- 19
வரைவிலக்கணம்:
இது உள்ளம் மற்றும் உடலை பாதிக்கும் ஒரு நோய் மட்டுமல்லாது சிந்தித்தல் மற்றும் மனித தொழிற்பாடு முறைகளில் பாரியளவு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அத்துடன் உணர்வு, உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் இட்டுச்செல்லும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்:
- நாளாந்த நடவடிக்கைளை மேற்கொள்வதில் ஆர்வமின்மை
- வழமைக்கு மாற்றமான பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படல்
- நம்பிக்கையற்ற உணர்வு
- வெளிப்படையான எவ்வித காரணமும் இன்றி இடைக்கிடை அழுதல்
- தூக்கக் கலக்கம்
- ஒன்றில் உன்னிப்பாக கவனம் செலுத்துவதில் சிரமம்
- முடிவுகளை எடுப்பதில் சிரமம்
- பதட்டமான நிலை
- அதிக தடுமாற்றம்
- தற்செயலாக உடல் எடை கூடுதல் அல்லது குறைதல்
- அதிகப்படியான உணரரும் திறன்
- சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்
- தன்னை தாழ்வுமனப்பாங்காக/ தரம் குறைத்து மதிப்பிடல்
- பாலியல் உணர்வுகள் அற்றுப்போதல்
- தற்கொலை எண்ணங்கள்/ தற்கொலை முயட்சிகளை மேற்றுக்கொள்ளல்
இவை மட்டுமல்லாது இன்னும் சில அறிகுறிகளும் உள்ளன, இவை ஆளுக்காள் வித்தியாசப்படும்.
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகள்:
- தொடரான வேலைப்பளு
- நீண்ட நேர தொடர் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடல்/ தொடராக சமூக வலைத்தளங்களை பாவித்தல்
- காதல்/பொருளாதார/ குடும்பப் பிரச்சினைகள்
- முக்கியமான, நெருக்கமானவரது/ விருப்பமான பொருள் இழப்பு
- நோயினால் பீடிக்கப்படுதல்
- நெருக்கமானவரது வெறுப்பு, புறக்கணிப்பு
- அதிகப்படியான கடன் சுமை
- தாங்கமுடியாத தோல்விகள்
- பாவம் நிறைந்த, பிரச்சனையான சூழல்
- அதிகமதிகம் பிரச்சினையான மனிதர்களை சந்தித்தலும், பிரச்சனை பற்றிய செவிமடுத்தல்களும்
மன அழுத்தத்தினால் ஏற்படும் விபரீதங்கள்:
- தற்கொலை
- போதைப்பொருள், புகைத்தல் பாவனைக்கு அடிமையாதல்
- சூழவுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தல்
- சமூகத்தை விட்டொதுங்கி அதிகம் தனித்திருப்பதை விரும்புதல்
- தேவையற்ற உள் குடும்ப மோதல்கள்
- குடும்ப உறவில் விரிசல் ஏற்படல்
- கல்வி நடவடிக்கைளில் ஈடுபாடு குறைதல்
- அனைத்து விடயங்களையும் பிரச்சனையாக நோக்குதல்
- மொத்தத்தில் அசாதாரண நிலைக்கு தள்ளப்படுதல்
மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிகள்:
- இறைவனை முறையாக வணங்குதல் மற்றும் அவனது கடமைகளை சரிவர நிறைவேற்றல்
- காலை, மாலை திக்ருகள், மற்றும் சந்தர்ப்ப துஆக்களை தவறாது ஓதி வருதல்
- நாளாந்தம் சிறு பகுதியேனும் திருமறையை (அல்குர்ஆனை) ஓதுதல், வாசித்து விளங்குதல்
- ஏற்படும் தோல்விகள், நஷ்டங்கள், சரிவுகள், இழப்புகள் அனைத்தும் இறைவனது விதி என்று நம்புவதுடன் அவற்றின் மீது பொறுமை கொள்ளுதல்
- ஆன்மீகம், பொது அறிவு மற்றுமுண்டான பயனுள்ள புத்தகங்களை வாசித்தல், பயனுள்ள அறிவுரைகள், காணொளிகளை பார்வையிடல்
- அதிகம் தனிமையைத் தவிர்த்தல்
- தொடர் வேலை/ கற்றல் என்பவற்றுக்கிடையில் இளைப்பாறி சற்று வேறு வெளி சிந்தனைகள்/ பேச்சுகளுக்கு செல்லுதல்
- பிரச்சினைகளை நெருக்கமான நம்பிக்கையானவரிடம் மனம்விட்டுப் பேசுதல்
- இருக்கும் சூழல்/நிலையை சற்று மாற்றுதல்
- தோல்விகள், சரிவுகள், அவலங்கள், இழப்புகளின் போது சோர்ந்துவிடாது இயலுமான அடுத்தகட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதுடன், துவண்டுவிடாது மேலெழுந்து வருதல்
- நல்லவர்களுடனான பழக்கம், தொடர்பு, நட்புகளை உருவாக்கிக்கொள்ளல்
வல்ல அல்லாஹ் அனைவரையும் இந்நோயிலிருந்து பாதுகாப்பானாக! பல்கலைக்கழகத்தில் கற்ற Guidance and Counselling இலிருந்து மக்கள் பயனடையும் நோக்கில் எழுதப்பட்டது.
நட்புடன்
அஸ்ஹான் ஹனீபா
வரைவிலக்கணம்: இது உள்ளம் மற்றும் உடலை பாதிக்கும் ஒரு நோய் மட்டுமல்லாது சிந்தித்தல் மற்றும் மனித தொழிற்பாடு முறைகளில் பாரியளவு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அத்துடன் உணர்வு, உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் இட்டுச்செல்லும். மன அழுத்தத்தின்…
வரைவிலக்கணம்: இது உள்ளம் மற்றும் உடலை பாதிக்கும் ஒரு நோய் மட்டுமல்லாது சிந்தித்தல் மற்றும் மனித தொழிற்பாடு முறைகளில் பாரியளவு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அத்துடன் உணர்வு, உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் இட்டுச்செல்லும். மன அழுத்தத்தின்…