என் – அவன்
- by admin
- 10
என்- அவன்
துறை தேர்ச்சி பெற்றவன்
மறை வேதம் கற்றவன்.
ஆன்மீகத்தை அள்ளிப்பருகி
ஆயுளை அழகாய் மாற்ற
இறைகாதல் கொண்டு
இறைவனுக்காய்
என்மீது காதல் கொண்டவன்.
அவன் ஒரு -மார்க்க
அறிஞனாயிருந்தால்.
என்- அவன்
பெண் பூவாய் எனை எண்ணி
இமையாய் காக்கும்
முள் வேலி அவன்.
நான் ரோஜாவாய் வாழ
வழிசெய்யும் என்-ராஜகுமாரனவன்.
அவன் கன்னிக்கவியும் நானேன்பான்,
கற்பனையொன்றித்த காதல் கவியை
நனவாக்கிடும் கன்னியும் நானேன்பான்,
என் அவன்- ஒரு கவிக்கோவாயிருந்தால்
என்-அவன்
மெல்லிசை மறந்து போவேன்
இன்னிசையாய்- உன்
இசை கேட்ட பின் நான்.
அவன் காந்தக்குரல் மழையில்
அடிக்கடி நனைவேன் நான்.
அவன் இசையில் தினம் தினம்
சிறை கைதியாவேன் நான்.
அவன் தலாட்டில்
மடிசாயும் மழலையாவேன் நான்.
என்-அவன் ஒரு பாடகனாயிருந்தால்.
என் -அவன்
அவனோ காரியம்கொண்டு
காவியம் படைப்பவன்.
அவன் வர்ணக் கிறுக்கள்களில்
விசித்திரமானதும் நானேன்பான்
விருப்பொவியமும் நானேன்பான்
அவன் ஒரு ஓவியனாயிருந்தால்.
Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka
என்- அவன் துறை தேர்ச்சி பெற்றவன் மறை வேதம் கற்றவன். ஆன்மீகத்தை அள்ளிப்பருகி ஆயுளை அழகாய் மாற்ற இறைகாதல் கொண்டு இறைவனுக்காய் என்மீது காதல் கொண்டவன். அவன் ஒரு -மார்க்க அறிஞனாயிருந்தால். என்- அவன்…
என்- அவன் துறை தேர்ச்சி பெற்றவன் மறை வேதம் கற்றவன். ஆன்மீகத்தை அள்ளிப்பருகி ஆயுளை அழகாய் மாற்ற இறைகாதல் கொண்டு இறைவனுக்காய் என்மீது காதல் கொண்டவன். அவன் ஒரு -மார்க்க அறிஞனாயிருந்தால். என்- அவன்…