கொரோனா

  • 29

உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ
உலகம் பேசும் பொருளாக மாறிவிட்டாயே
உலகமே ஸ்தம்பித்து விட்டது.

நீ எங்கிருந்து வந்தாய் என்றும் தெரியவில்லை
நீ ஏதற்காக வந்தாய் என்றும் புரியவில்லை
நீ என்ன தான் செய்கிறாய் என்றும் அறியவில்லை
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.
நீ மனித உயிர்களை காவுகொள்ளும் ராட்சன் என்று

உலகமே சுக்கு நூறாகி
தனிமை எனும் வாசகம் தாண்டவம் ஆடுகின்றது.
விந்தைகள் பல புரிந்து
வியக்க வைக்கும் சாகசங்களை தந்த
விஞ்ஞானமும் வைத்தியமும்
வியந்து பார்க்கும் வைரஸ் நீ.

எங்கள் அழுகையை ரசித்தது போதும்
எங்களை வீட்டிலே முடக்கியது போதும்
எங்கள் பொருளாதாரத்தை வீணடித்தது போதும்
எங்கள் உறவுகளின் இழப்பை பார்த்தது போதும்
எங்களை தனித்தனியாக பிரித்தும் போதும்
உன்னை அடக்க முடியவில்லை.
ஆனாலும்
உன்னை தடுக்க முயற்சித்தேன்
உனக்கெதிரான மருந்தை
கண்டுபிடிக்க முடியவில்லையே
ஆனால் உன்னை வெல்லும் மருந்து
“நோய் ஏதிர்ப்பு சக்தியே”

Nushra Aadham
Akurana
SEUSL

உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ உலகம் பேசும் பொருளாக மாறிவிட்டாயே உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாய் என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாய் என்றும் புரியவில்லை நீ என்ன தான்…

உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ உலகம் பேசும் பொருளாக மாறிவிட்டாயே உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாய் என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாய் என்றும் புரியவில்லை நீ என்ன தான்…

3 thoughts on “கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *