மீண்டும் எரியூட்டப்பட்டது

  • 16

தீர்வுகள் திணிக்கப்பட்டு
சிந்தனைக்கு சீல்வைக்கப்பட்டது
ஒன்றிப்போதலை தவிர
வழியே இல்லை – வேறு
மாயைகள்
போலிகளால்
வழிநடாத்தப்படும்
விசித்திர உலகமிது.

மரங்களை சாய்க்க
கோடாரிக்கு பிடிகள்தானே
துணைபோகும்.

எரியுண்ட கடந்தகாலம்
பசுமையான
எதிர்காலக் கனவுகளால்
மறைக்கப்பட
இடை இடையே
தீப்பொறிகளாய்
தீவிரவாத கோஷங்கள்.

சகவாழ்வு
தேசிய உணர்வு
வேறுபாடுகள் நிறைந்த
வேஷதாரிகளின்
முரண்பாடுகளால்
அர்த்தமற்றுப் போகின்றது.

தோற்றுப்போன
நல்லிணக்கம் இனவாதிகளால்
மீண்டும் எரியூட்டப்பட்டது.

நாச்சியாதீவு
எம்.சஹ்ரின் அஹமட்

தீர்வுகள் திணிக்கப்பட்டு சிந்தனைக்கு சீல்வைக்கப்பட்டது ஒன்றிப்போதலை தவிர வழியே இல்லை – வேறு மாயைகள் போலிகளால் வழிநடாத்தப்படும் விசித்திர உலகமிது. மரங்களை சாய்க்க கோடாரிக்கு பிடிகள்தானே துணைபோகும். எரியுண்ட கடந்தகாலம் பசுமையான எதிர்காலக் கனவுகளால்…

தீர்வுகள் திணிக்கப்பட்டு சிந்தனைக்கு சீல்வைக்கப்பட்டது ஒன்றிப்போதலை தவிர வழியே இல்லை – வேறு மாயைகள் போலிகளால் வழிநடாத்தப்படும் விசித்திர உலகமிது. மரங்களை சாய்க்க கோடாரிக்கு பிடிகள்தானே துணைபோகும். எரியுண்ட கடந்தகாலம் பசுமையான எதிர்காலக் கனவுகளால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *