மொழி அறியா ஒரு கவிதை

  • 12

உன் பெயர் கூட என் உதட்டிற்கு
முனுமுனுக்க தெரியாது.
ஆனால் உன் குணத்தாலே
என் உள்ளம் தொட்டவன் நீ.

நீ எனக்கென்ன உறவென்று
என்னால் கூற இயலாது!
ஆனால் என் வாழ்வு முழுவதும்
நீயே வந்திடக் கூடிய
ஒரு உறவாய் நீயே வேண்டுமென
என் அடி மனது கூச்சலிடுகின்றது.

நான் எதிர்பார்க்கும் இரக்கங்கள் யாவும்
நீ தான் எனக்கு அள்ளித்
தரக் கூடியவனாக இருந்தால்.
என் உள்ளம் சாந்தி அடையும்!

மொழி அறியா ஒரு கவிதை
உனக்கென வரைகிறேன்.
எனதிறைவன் உன்னை
என்னுடன் இணைக்க எண்ணியிருந்தால்!
உன் இதயத்தில்
எனக்கொரு மாளிகை கட்டு!

இணைத்திட வேண்டும் உன்னுடன் என்னை
என் பிரார்த்தனைகள் யாவும் இது தான்.
உனதுள்ளம் இதை உணருமோ?
இது எனது
மொழி அறியா ஒரு கவிதை.

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies
South Eastern University of Sri Lanka

உன் பெயர் கூட என் உதட்டிற்கு முனுமுனுக்க தெரியாது. ஆனால் உன் குணத்தாலே என் உள்ளம் தொட்டவன் நீ. நீ எனக்கென்ன உறவென்று என்னால் கூற இயலாது! ஆனால் என் வாழ்வு முழுவதும் நீயே…

உன் பெயர் கூட என் உதட்டிற்கு முனுமுனுக்க தெரியாது. ஆனால் உன் குணத்தாலே என் உள்ளம் தொட்டவன் நீ. நீ எனக்கென்ன உறவென்று என்னால் கூற இயலாது! ஆனால் என் வாழ்வு முழுவதும் நீயே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *