மக்கள் மனங்களை வென்றவன்
- by admin
- 24
ஊர்கள் கடந்து
பக்கத்து மாவட்டத்தில்
பார் ஆளுமன்றம் செல்ல
மனித மனங்களை வென்று வந்தான்
மனிதம் கொண்ட மனிதனிவன்
நேர்மை கொண்ட நெஞ்சனிவன்
மக்களுக்கான குரல் இவன்
சட்டம் படித்து ஆட்சி செய்ய
அரசியல் கற்று வந்தான்
ஊழலின்றி ஊரைக் காக்க
ஊடகவியலாளனாய் உள்ளம் கவர்ந்து
மாவட்டத்திற்கென மலர்ந்து வந்தான்
மனித மனங்களை வென்று வந்தான்
“முஷர்ரப் முதுநபீன்”
சட்டம் உன் குரலால் உயர வேண்டும்
நீதி உன் கைகளால் நிமிர வேண்டும்
சமூகம் உன்னால் சமத்துவம் காண வேண்டும்
இனத்துவம் உன்னால் வதைக்கப்பட வேண்டும்
தோழா!
அரசியலை நீயே அறிந்து செய்
சட்டத்தை காவு கொள்ளும்
கயவரை கண்டித்து வை
அறிவாற்றல் உள்ள ஆளுமையாளன் நீ
குறி தப்பாது புரிவாய் சேவைகள்
மக்கள் தேவைகள் தீர
குரலொளிப்பாய் செழிப்பாய்
இறைவன் துணையுனக்கு
மக்கள் குரலுனக்கு
மக்களாட்சியை மக்களுக்காய்
ஜனநாயகனாய் செய்து முடி
வாழ்த்துக்கள் சகோதரா!
ஏரூர் நிலாத்தோழி
ஊர்கள் கடந்து பக்கத்து மாவட்டத்தில் பார் ஆளுமன்றம் செல்ல மனித மனங்களை வென்று வந்தான் மனிதம் கொண்ட மனிதனிவன் நேர்மை கொண்ட நெஞ்சனிவன் மக்களுக்கான குரல் இவன் சட்டம் படித்து ஆட்சி செய்ய அரசியல்…
ஊர்கள் கடந்து பக்கத்து மாவட்டத்தில் பார் ஆளுமன்றம் செல்ல மனித மனங்களை வென்று வந்தான் மனிதம் கொண்ட மனிதனிவன் நேர்மை கொண்ட நெஞ்சனிவன் மக்களுக்கான குரல் இவன் சட்டம் படித்து ஆட்சி செய்ய அரசியல்…