நிழற்படமானது என் வாழ்க்கை

  • 13

அந்திப் பொழுதின் சாயலில்
மலரும் அல்லிப் பூ நானடி
என்னை அரலி விதையென
அடியோடு வெட்டியதேனடி

தென்றலென வந்து உன் காதல்
என்னை தொடுமென நினைத்தேன்
தேனிலும் விசமுண்டு என்பதையே
உன் விழிகளின் மறுப்பில்தான் உணர்ந்தேன்

என் உமிழ்நீரும் உன்னருகில்
விசமென உருமாறியே
என்னுள் நெடுங்காலம்
உயிர் வாழ்கிறது

அன்பே உன்னைக் காணும்
நாளிகையில் மாத்திரம்தான்
என் மனம் மாளிகையில்
வாழ்வதாய் பேரானந்தத்துடன்
பெருமூச்சு விடுகிறது

கடிவாளமாய் உன் நினைவுகள்
என்னுள் உயிர் வாழ்வதால்
குடிபோதையில் நான் வரைந்த
நிழற்படமானது என் வாழ்க்கை!

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை-08

அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே உன் விழிகளின் மறுப்பில்தான்…

அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே உன் விழிகளின் மறுப்பில்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *