வீழாமல் வாழ்கிறேன்

  • 14

சுட்டெறிக்கும் பாலைவனம் தனில்
நீ என்னை விட்டு பிரிந்த போதும்.
அலை மோதும் உன் நினைவிகளை
சுமந்த படியே நான் செல்கிறேன்.

இடை நடுவே நீ சொன்ன
நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்
நம்பிக்கை துரோகங்களாக
சித்தரிக்கப்பட்டுக் கொண்டே சென்றன.

கண்ணீரின் விலையதனை
உணராமலே இருந்த எனக்கு.
கண்ணீரின் பெருமதியை
உணரச்செய்த உனக்கு
எனது கோடி நன்றிகள்.

இன்றுடன் உன்னை மறந்திட வேண்டும் என்று
நான் தினமும் உத்வேகம் கொண்டாலும்.
என் பெண்மைக்கு அடக்கம்
கற்பிக்கும் உனக்கு நன்றிகள்.

கால்கள் போகும் தூரம் எது வரையோ
அது வரை உன் ஞாபகங்கள்.
நான் மடிந்து கிடக்கும் நொடிகளில் கூட
என்னை மீள எழச்செய்கின்றன.

வெறுக்க முடியாது
என்னால் உன்னை
அதனாலே நினைத்துக் கொள்கிறேன்.

நீ என்னை தனிமையில்
விட்டு சென்றதால் தான் நான்
எனக்கான பாதையை தெரிந்து கொண்டேன்.
நான் இன்னும் வீழவில்லை
தலை நிமிர்ந்தே வாழ்கிறேன்.

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies
South Eastern University of Sri Lanka

சுட்டெறிக்கும் பாலைவனம் தனில் நீ என்னை விட்டு பிரிந்த போதும். அலை மோதும் உன் நினைவிகளை சுமந்த படியே நான் செல்கிறேன். இடை நடுவே நீ சொன்ன நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் நம்பிக்கை துரோகங்களாக…

சுட்டெறிக்கும் பாலைவனம் தனில் நீ என்னை விட்டு பிரிந்த போதும். அலை மோதும் உன் நினைவிகளை சுமந்த படியே நான் செல்கிறேன். இடை நடுவே நீ சொன்ன நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் நம்பிக்கை துரோகங்களாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *