குறைவில்லா வாழ்க்கை

  • 12

ஏக்கம் நிறைந்த பறவைக்கு
ஏமாற்றம் ஒன்றும் சலிப்பில்லை

தாகம் நிறைந்த குருவிக்கு
விக்கல் ஒன்றும் புதிதில்லை

கவலை நிறைந்த கண்ணிற்கு
கண்ணீர் ஒன்றும் பெரிதில்லை

வறுமை நிறைந்த பிஞ்சிற்கு
பட்டினி ஒன்றும் பகையில்லை

கண்கள் இழந்த ஆந்தைக்கு
இருட்டு ஒன்றும் பயமில்லை

அன்பை இழந்த இதயத்தில்
தனிமை ஒன்றும் கனமில்லை

இறைவன் அருளும் செல்வத்தை
இனிதாய் யாரும் ஏற்றாலே
இன்பமான வாழ்விற்கு
இகத்தில் என்றும் குறைவில்லை

Shima Harees
Puttalam

ஏக்கம் நிறைந்த பறவைக்கு ஏமாற்றம் ஒன்றும் சலிப்பில்லை தாகம் நிறைந்த குருவிக்கு விக்கல் ஒன்றும் புதிதில்லை கவலை நிறைந்த கண்ணிற்கு கண்ணீர் ஒன்றும் பெரிதில்லை வறுமை நிறைந்த பிஞ்சிற்கு பட்டினி ஒன்றும் பகையில்லை கண்கள்…

ஏக்கம் நிறைந்த பறவைக்கு ஏமாற்றம் ஒன்றும் சலிப்பில்லை தாகம் நிறைந்த குருவிக்கு விக்கல் ஒன்றும் புதிதில்லை கவலை நிறைந்த கண்ணிற்கு கண்ணீர் ஒன்றும் பெரிதில்லை வறுமை நிறைந்த பிஞ்சிற்கு பட்டினி ஒன்றும் பகையில்லை கண்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *