தேன் துளியும் எறும்பும்

  • 12

தேன் துளியொன்று பூமியில் விழுந்தது. அவ்விடம் வந்த சிறியதோர் எறும்பு அந்தத் தேன் துளியின் ஓரத்தில் நின்று சுவைக்க ஆரம்பித்தது. பின் அங்கிருந்து செல்வதற்கு நினைத்தது எறும்பு. ஆனால் தேனின் சுவை எறும்பை மிகவும் கவர்ந்து விடவே மீண்டும் தேனை சுவைக்க ஆரம்பித்தது. இரண்டாம் முறையும் திரும்பிச் செல்ல நினைத்த எறும்புக்கு தேன் துளியின் ஓரத்தில் இருந்து கொண்டு தேனை ருசி பார்த்தது திருப்தியாக இருக்கவில்லை. இதை நன்கு உணர்ந்த எறும்பு இன்னும் நன்றாக அனுபவிக்க தேன் துளையினுள் நுழைய முடிவு செய்தது.

தேன் துளையினுள் நுழைந்த எறும்பு நன்றாக அனுபவிக்க ஆரம்பித்தது. ஆனால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. அதன் கால்கள் இறுகி பூமியுடன் ஒட்டிக் கொண்டன. அதனால் சற்றும் அசைய முடியவில்லை. அதே நிலையில் தொடர்ந்திருந்த எறும்பு இறுதியில் செத்துப் போனது. தான் ருசி பார்த்த அளவோடு நிறுத்தியிருந்தால் எறும்புக்கு இந்தக் கொடுமையான நிலை ஏற்பட்டிருக்காது. பேராசையின் விளைவு.

உலகமும் அதன் இன்பங்களும் தேன் துளி போன்றுதான் இனிமையானது. மனிதன் அதை சுவைக்கும் எறும்பு போன்றவன். யார் அதன் ஓரத்தில் நின்று அளவாக அனுபவிக்கின்றானோ அவன் தப்பி விடுவான். யார் அளவுக்கு மீறிய ஆசையினால் அதன் இன்பத்தில் மூழ்கி விடுகின்றானோ அவன் அழிந்து விடுவான்.

உலகத்தில் அளவோடு நடந்து கொள். உலக இன்பத்தின் மீதான உன் அதீத மோகமும் பேராசையும் உன் கண்களைக் கூட மறைத்து விடும். நலவும் தெரியாது கெடுதியும் தெரியாது. அதனால் எதைச் செய்யவும் நீ துணியலாம். இறுதியில் உன் மறுமை வாழ்வைக் கூட சிதைத்து விடுவாய்.

இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ். கிடைப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

பாஹிர் சுபைர்

தேன் துளியொன்று பூமியில் விழுந்தது. அவ்விடம் வந்த சிறியதோர் எறும்பு அந்தத் தேன் துளியின் ஓரத்தில் நின்று சுவைக்க ஆரம்பித்தது. பின் அங்கிருந்து செல்வதற்கு நினைத்தது எறும்பு. ஆனால் தேனின் சுவை எறும்பை மிகவும்…

தேன் துளியொன்று பூமியில் விழுந்தது. அவ்விடம் வந்த சிறியதோர் எறும்பு அந்தத் தேன் துளியின் ஓரத்தில் நின்று சுவைக்க ஆரம்பித்தது. பின் அங்கிருந்து செல்வதற்கு நினைத்தது எறும்பு. ஆனால் தேனின் சுவை எறும்பை மிகவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *