அவகாசம்
- by admin
- 11
இடி, மின்னலுடன்
கூடிய பெருமழை பொழிந்த
மறு கணமே
வெயில் அடித்திடுமா?
ஏற்கெனவே வானில் சூழ்ந்துள்ள
கருமேகங்கள் கலைந்து
மழையில் நனைந்து
தெப்பமாகிப் போன பூமியை
சூரியனது ஒளிக்கதிர்கள்
முத்தமிட்டு தழுவிக் கொள்ள
ஒரு சிறு கால அவகாசம் தேவை.
அது போல் தான் நம் வாழ்விலும்.
இருளிலிருந்து விடிவை காணவும்
புதிரிலிருந்து விடையைக் தேடவும்.
கால இடைவெளி அவசியம்.
பழையன கழிந்தால் தான்
புதியன உள்வாங்கப்படும்!
புதியன வரவேற்கப்பட முன்
நீ உன்னை தயார்படுத்திக்
கொள்ள வேண்டும்!
இடைவெளி கிடைப்பது
ஓய்வு பெறுவதற்காக அல்ல.
உன்னை நீயே
சிலையென செதுக்கிக் கொள்ள!
Noor Shahidha.
SEUSL.
Badulla.
இடி, மின்னலுடன் கூடிய பெருமழை பொழிந்த மறு கணமே வெயில் அடித்திடுமா? ஏற்கெனவே வானில் சூழ்ந்துள்ள கருமேகங்கள் கலைந்து மழையில் நனைந்து தெப்பமாகிப் போன பூமியை சூரியனது ஒளிக்கதிர்கள் முத்தமிட்டு தழுவிக் கொள்ள ஒரு…
இடி, மின்னலுடன் கூடிய பெருமழை பொழிந்த மறு கணமே வெயில் அடித்திடுமா? ஏற்கெனவே வானில் சூழ்ந்துள்ள கருமேகங்கள் கலைந்து மழையில் நனைந்து தெப்பமாகிப் போன பூமியை சூரியனது ஒளிக்கதிர்கள் முத்தமிட்டு தழுவிக் கொள்ள ஒரு…