காந்த கரு விழிகள்

  • 9

அந்திசாயும் நேரம்
சாலையோரமாக
ஒத்தையாய்
நடக்கையிலே
கருமேகங்கள் சூழ
இடியின் மேளதாளத்துடன்
மின்னலும் சேர்ந்து
மழைத்துளிகள் மண்ணை
நோக்கி வர – கையில்
குடை இல்லை.

கொட்டும் மழையின்
காட்டம் நிற்கும் வரை
பாதையோர தேநீர்
கடையில் ஒதுங்கினேன் – அந்தநேரம்
கண்ணாடி சாளரத்தின்
வழியே ஓடும்
நீர் துளிகளின்
ஊடே அந்த இரு
கண்கள் – அல்ல
காந்தங்கள்
ஏதோ சொல்லி
சென்றது திடுக்கிட்டு
திரும்பி பார்க்கிறேன்
காணவில்லை
அந்தக் கருவிழிகளை – மழை நின்றும்
மனம் நிறுத்தவில்லை தேடலை.

பாதையோர தேநீர்
கடையைக் கடக்கையில்
இன்றும் கூட
சற்று நின்று பார்க்கிறேன்
அந்த கரு விழிகளைத்
தேடி – கனவிலும் வந்து
கண்ணடித்துச் செல்கிறது!

Rushdha Faris
Shout Eastern University of Sri Lanka.

அந்திசாயும் நேரம் சாலையோரமாக ஒத்தையாய் நடக்கையிலே கருமேகங்கள் சூழ இடியின் மேளதாளத்துடன் மின்னலும் சேர்ந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வர – கையில் குடை இல்லை. கொட்டும் மழையின் காட்டம் நிற்கும் வரை பாதையோர…

அந்திசாயும் நேரம் சாலையோரமாக ஒத்தையாய் நடக்கையிலே கருமேகங்கள் சூழ இடியின் மேளதாளத்துடன் மின்னலும் சேர்ந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வர – கையில் குடை இல்லை. கொட்டும் மழையின் காட்டம் நிற்கும் வரை பாதையோர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *