மர்மம்

  • 12

ஏன் இந்த புறக்கணிப்பு?
எதற்காக இத்தனை மௌனம்?
எப்படி உடைந்தது உறவு?
எங்கு பிழைத்தது விம்பம்?
எதனால் நீண்டது தூரம்?

எதனை கேட்க?
எவரிடம் விடை தேட?
எதுவுமே புரியவில்லை
எதையுமே எதிர்ப்பார்க்கவில்லை

என்றாலும் மனம் வலிக்கிறது
என்பதை சரி உணர மாட்டாயா?
என்று கேட்டு நிற்கிறது என் மனம்
என்னை வெறுப்பது எங்கனம்?

என்னை தடுப்பது தலைக்கனம்
என்றாலும் கதைப்பேன் மறுகணம்
எப்போது நீ
என்னை புரிந்திடும் அக்கணம்!

Noor Shahidha
SEUSL
Badulla

ஏன் இந்த புறக்கணிப்பு? எதற்காக இத்தனை மௌனம்? எப்படி உடைந்தது உறவு? எங்கு பிழைத்தது விம்பம்? எதனால் நீண்டது தூரம்? எதனை கேட்க? எவரிடம் விடை தேட? எதுவுமே புரியவில்லை எதையுமே எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும்…

ஏன் இந்த புறக்கணிப்பு? எதற்காக இத்தனை மௌனம்? எப்படி உடைந்தது உறவு? எங்கு பிழைத்தது விம்பம்? எதனால் நீண்டது தூரம்? எதனை கேட்க? எவரிடம் விடை தேட? எதுவுமே புரியவில்லை எதையுமே எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *