மணித்துளி
- by admin
- 15
பார் போற்ற வாழ்ந்த
பால்நிலவே எம்நபியே
பாசாங்கு இல்லாமல் பண்பாக நடந்தவரே
பாழ்உலகை புது உலகாய் படைத்தவரே
கண்ணியம் காத்து
கருணையில் ஊற்றெடுத்த
கற்கண்டு எம்நபியே கற்பூரமே
களையெறிந்து காத்திரமாய நடந்தவரே
மாமனித முழுநிறைவே
முத்தான எம்நபியே மணித்துளியே
முகமன் சலாம் சொல்லி
மனக்கசப்பை உடைத்தவரே
தாயிப் தக்வா என தவறாமல் துதித்திட
திடசங்கற்பம் பூண்டவரே
திருமணம் தினசரி அத்தனையிலும்
திருமறை பேணியவரே
சாஸ்திரம் சமிக்ஞைகளை சிறுதுளியும்
சேர்க்காமல் சீராய் வாழ்ந்தவரே
செம்மல்நபி சுயநலமற்ற நபி
சமுதாயத்துக்காய் சுயநலத்தை துறந்தவரே
ஆணிவேராய் இறைமறையை இறுகப்பிடித்து
இஸ்லாத்துக்காய்
அத்தனையும் இழந்தவரே
அதனால்தான் என்னவோ
அல்லாஹ்வால்
உயர்த்தப்பட்டு சுவனபதிற்கு
உலகத்திலே உரித்துடையவரானவரே
Binth ameen
பார் போற்ற வாழ்ந்த பால்நிலவே எம்நபியே பாசாங்கு இல்லாமல் பண்பாக நடந்தவரே பாழ்உலகை புது உலகாய் படைத்தவரே கண்ணியம் காத்து கருணையில் ஊற்றெடுத்த கற்கண்டு எம்நபியே கற்பூரமே களையெறிந்து காத்திரமாய நடந்தவரே மாமனித முழுநிறைவே…
பார் போற்ற வாழ்ந்த பால்நிலவே எம்நபியே பாசாங்கு இல்லாமல் பண்பாக நடந்தவரே பாழ்உலகை புது உலகாய் படைத்தவரே கண்ணியம் காத்து கருணையில் ஊற்றெடுத்த கற்கண்டு எம்நபியே கற்பூரமே களையெறிந்து காத்திரமாய நடந்தவரே மாமனித முழுநிறைவே…