முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
- by admin
- 32
அகிலத்தின் தலைவரே
அருட்கொடைகளின் அகள்விளக்கே
அனைத்து இறைத்தூதர்களின் முதல்வரே
அன்னை ஆமினாவின் மணிவயிற்றில்
அருள் மகனாய் பிறந்தீரே முஹம்மது தாஹாவே!
நீர் பிறந்த நொடியில் தான்
ஆமினாவின் மணிவயிற்றில்
பேரொளியும் தோன்றிய தே!
அது தந்த பிரகாசம் தான் ஷாமின்
கோட்டைகளே மிளிரச் செய்தனவே
இருளில் மூழ்கிக் கிடந்த
அறியாமை சமூகத்தை ஒளிபெறச்
செய்ய வந்த நபியே!
பிறக்கும் முன்னே
தந்தையை இழந்து.
இளமைதனில் இன்னல்
தனை அனுபவித்தீரே!
பொறுமையெனும் சின்னத்தை
ஏந்திய நபிகள் நாயகமே!
இறைத்தூதை எத்திவைத்ததற்காய்.
மக்கத்து குறைஷிகளால்
கொடுமை செய்யப் பட்டீரே!
இறைவேதம் தனை நிலைநாட்டவே!
தான் பிறந்த மண்ணை விட்டே
ஹிஜ்ரத் செய்து
மதீனா நோக்கி சென்றீரே!
“அஸ்ஸாதிக்” என்றும்
நம்பிக்கையாளருமாய்
“அல் அமீன்” என்று
உண்மையாளருமாய் பட்டம் பெற்றீரே!
அழுகிய ஒட்டகைக் குடலையும்,
கழுத்தை நெறுக்கிய
சீலைத்துணியையும் பணிவுடன்
பொருத்துக் கொண்டீரே!
உலகத்தை தூய்மை
செய்த மா நபியே!
ஹஜ்ஜதுல் விதாவில்
பேரொளி தனை
இறுதியாய் மொழிந்தீரே!
ஈற்று நபி கோமானே.
நீர் இல்லாது போன உலகு
இருளின் விளிம்பில்
சிக்கித் தவிக்கிறது.
ஈருலக வாழ்வினிலும்
உமது உம்மத்தின்
வாழ்வு செலித்திடவே
பிரார்த்தனை செய்வீரே!
Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka
அகிலத்தின் தலைவரே அருட்கொடைகளின் அகள்விளக்கே அனைத்து இறைத்தூதர்களின் முதல்வரே அன்னை ஆமினாவின் மணிவயிற்றில் அருள் மகனாய் பிறந்தீரே முஹம்மது தாஹாவே! நீர் பிறந்த நொடியில் தான் ஆமினாவின் மணிவயிற்றில் பேரொளியும் தோன்றிய தே! அது…
அகிலத்தின் தலைவரே அருட்கொடைகளின் அகள்விளக்கே அனைத்து இறைத்தூதர்களின் முதல்வரே அன்னை ஆமினாவின் மணிவயிற்றில் அருள் மகனாய் பிறந்தீரே முஹம்மது தாஹாவே! நீர் பிறந்த நொடியில் தான் ஆமினாவின் மணிவயிற்றில் பேரொளியும் தோன்றிய தே! அது…