முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
- by admin
- 92
ஏக இறைவனின் இறுதித் தூதராய்
இவ் வையகம் காக்க வந்த நாயகமே
இம்மையில் எப்படி வாழவேண்டும் என்று
கற்றுத் தந்து மறுமை வாழ்வுக்காய்
வாழ வழிகள் பல சொல்லிச் சென்ற தூதரே
உலகம் அழியும் வரை காக்கப்படும்
அல்குர்ஆனை பெற்ற நாயகமே
இறுதித் தூதரை இறைவழி போற்றும் நாயகமே
உம்மை படைக்கவில்லை என்றால்
இவ்வுலகமே இல்லை நபியே
உம்மி நபியாய் உலகில்
அன்னை ஆமினாவின் கருத்தரித்து
உலகின் பொக்கிஷமாம்
பாத்திமாவின் தந்தையான எம் நபியே
சிறுவயதிலேயே நம்பிக்கையாளன்
என்ற பட்டம் பெற்ற
நாற்பது வயதில் நபித்துவம் அடைந்து
உலக மக்களின் ஒளிவிலக்காணீர்
ஹிரா குகையில் ஓரிரவில் உலகிற்கான
திருமறை அல்குர்ஆனை ஏந்தி வந்த இறுதித் தூதரை
ஏகன் அல்லாஹ்வின் ஏகாந்த படைப்பாய்
உலகின் பொக்கிஷமாய் வந்துதித்த நாயகமே
விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுத்து
அடிமைகளையும் மதித்து நடந்த
உத்தமத் தூதரே சத்திய போதகரே
உலகையே உள்ளங்கைக்குள்
அடக்கியாளும் ஆளுமை இருந்தும்
சாமானியணாய் வாழ்ந்து
சமத்துவம் போதித்த நம் தூதரே
சத்திய மார்க்கத்தை
ஜாஹிலியத்து மக்கள் தொட்டு
இவ்வுலகம் அழியும் வரை
நிலைநாட்டி சென்ற தூதரே
நீர் என்றும் எம் இதயத் துடிப்பில்
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட
புனிதராய் இருந்தபோதும்
பாவத்தை விட்டு விலகியே வாழ்ந்து
மண்ணறை சென்ற எம் தூதரே
மறுமையிலும் எமக்காக போராடும்
வல்ல இறைவன் அல்லாஹ்விடம்
வாதாடி சுவனப்பாதை
எம்மை கூட்டிச் செல்ல காத்திருக்கும்
எம் தூதரே காத்து கிடக்கிறோம்
உங்களை எங்கள் விழிகள்
சந்திக்கும் நேரத்திற்காய்
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
கவிதை காதலன்
அக்குறணை லஷாட்
ஏக இறைவனின் இறுதித் தூதராய் இவ் வையகம் காக்க வந்த நாயகமே இம்மையில் எப்படி வாழவேண்டும் என்று கற்றுத் தந்து மறுமை வாழ்வுக்காய் வாழ வழிகள் பல சொல்லிச் சென்ற தூதரே உலகம் அழியும்…
ஏக இறைவனின் இறுதித் தூதராய் இவ் வையகம் காக்க வந்த நாயகமே இம்மையில் எப்படி வாழவேண்டும் என்று கற்றுத் தந்து மறுமை வாழ்வுக்காய் வாழ வழிகள் பல சொல்லிச் சென்ற தூதரே உலகம் அழியும்…