புது உலகம்
- by admin
- 10
வஞ்சகம் இல்லா
நெஞ்சகம் கொள்வோம்.
சஞ்சலம் தனைக் கொல்வோம்.
பேதைமை அழித்து
போதனை யுரைத்து
வாலிப மனங்களை நெய்வோம்.
குவலயம் சிறக்க
குதூகலம் பிறக்க
அன்பினால் அனைத்தையும் வெல்வோம்.
இருட் திரை நீக்கி
அருட் திரை போர்த்தி
மானிடர் வாழ்க்கையை உயிர்ப்பிப்போம்.
பிரிவினை யகற்றி
புரிதலைப் போற்றி
புதியதோர் உலகினை செய்வோம்.
மக்கொனையூராள்
வஞ்சகம் இல்லா நெஞ்சகம் கொள்வோம். சஞ்சலம் தனைக் கொல்வோம். பேதைமை அழித்து போதனை யுரைத்து வாலிப மனங்களை நெய்வோம். குவலயம் சிறக்க குதூகலம் பிறக்க அன்பினால் அனைத்தையும் வெல்வோம். இருட் திரை நீக்கி அருட்…
வஞ்சகம் இல்லா நெஞ்சகம் கொள்வோம். சஞ்சலம் தனைக் கொல்வோம். பேதைமை அழித்து போதனை யுரைத்து வாலிப மனங்களை நெய்வோம். குவலயம் சிறக்க குதூகலம் பிறக்க அன்பினால் அனைத்தையும் வெல்வோம். இருட் திரை நீக்கி அருட்…