யோசிப்போமா
- by admin
- 15
காலம் கடந்து போய்விட்டது
இயக்கங்களாகவும்
கட்சிகளாகவும் பிரிந்து
உனக்கு நானும்
எனக்கு நீயும்
குற்றமும் குறையும் சொல்லியே
காலம் கடந்து போய்விட்டது
சாதிப்பதற்கும் போதிப்பதற்கும்
ஏராளமாய்
அணிவகுத்திருக்கும் போதில்
வாதப்பிரதிவாதம் செய்தே
குதர்க்கம் செய்து
பிரிவினை செய்தே
சொந்த வண்டவாளம் எல்லாம்
இன்று தண்டவாளம் ஏற்றியாச்சு
உள்வீட்டுப் பூசல் எல்லாம்
ஊதி ஊதி
ஊரெல்லாம் பரப்பியாச்சு
வலுவிழந்து போனோம்
வழு விளைய
காரணமானோம் – முடிவு
குரங்கின் கையில் பூமாலை.
இனிமேலாவது யோசிப்போமா?
இல்லையேல்
அநியாயக் காரர்களிடம் யாசிப்போமா?
மக்கொனையூராள்.
காலம் கடந்து போய்விட்டது இயக்கங்களாகவும் கட்சிகளாகவும் பிரிந்து உனக்கு நானும் எனக்கு நீயும் குற்றமும் குறையும் சொல்லியே காலம் கடந்து போய்விட்டது சாதிப்பதற்கும் போதிப்பதற்கும் ஏராளமாய் அணிவகுத்திருக்கும் போதில் வாதப்பிரதிவாதம் செய்தே குதர்க்கம் செய்து…
காலம் கடந்து போய்விட்டது இயக்கங்களாகவும் கட்சிகளாகவும் பிரிந்து உனக்கு நானும் எனக்கு நீயும் குற்றமும் குறையும் சொல்லியே காலம் கடந்து போய்விட்டது சாதிப்பதற்கும் போதிப்பதற்கும் ஏராளமாய் அணிவகுத்திருக்கும் போதில் வாதப்பிரதிவாதம் செய்தே குதர்க்கம் செய்து…