இயற்கையே
- by admin
- 13
வானம் கறுத்திருந்த மாலைப்பொழுது
தூவானம் சிந்துகின்ற மழைப்பொழுது
குளிர்காற்றின் தழுவலில்
கூந்தல் கலைந்து நடன ஒத்திகை பார்க்க
புகைப்படமெடுக்க வந்தது மின்னல்
சந்தோஷக் கரவொலியாய் இடியோசை
கருக்கொண்ட மேகங்கள்
பாய் விரித்தாற் போல் இருக்க
அசைந்தாடும் தாவரங்கள்
அழகாகச் சாமரங்கள் வீசிநிற்க
தூரத்து மலை மேலே
சுருள் சுருளாய்ப் புகை பயணம்
இருள் சூழும் வேளையிலே
இதமாக ஒரு மாற்றம்
மனமெங்கும் இயற்கையுடன்
ஆடுகின்ற மலர்க்கூட்டம்
இயற்கையின் நிகழ்வுகள்
இணையில்லாக் கவிதைகள்
மக்கொனையூராள்
வானம் கறுத்திருந்த மாலைப்பொழுது தூவானம் சிந்துகின்ற மழைப்பொழுது குளிர்காற்றின் தழுவலில் கூந்தல் கலைந்து நடன ஒத்திகை பார்க்க புகைப்படமெடுக்க வந்தது மின்னல் சந்தோஷக் கரவொலியாய் இடியோசை கருக்கொண்ட மேகங்கள் பாய் விரித்தாற் போல் இருக்க…
வானம் கறுத்திருந்த மாலைப்பொழுது தூவானம் சிந்துகின்ற மழைப்பொழுது குளிர்காற்றின் தழுவலில் கூந்தல் கலைந்து நடன ஒத்திகை பார்க்க புகைப்படமெடுக்க வந்தது மின்னல் சந்தோஷக் கரவொலியாய் இடியோசை கருக்கொண்ட மேகங்கள் பாய் விரித்தாற் போல் இருக்க…