உடைந்த மனக்கண்ணாடி

  • 17

உன் வேடம் தாங்கல்களை
உண்மையாய் கேட்டேன்
அதை எனக்கு வேஷமாய் தந்தாய்
அதை சுட்டி உண்மையாய் இரு என்றேன்
மீண்டும் என்னை ஏமாற்றினாய்

என் அன்பும் அழுகையும்
வெறும் இழுத்து பிடிப்பாய்
உனக்கு உணர்த்தினாலும்
இனி உன் அழைப்பு
என் காதில் கேட்காது

உன் பேச்சில் கலப்படம் போதும்
உன் செயலில் மறைப்பும் போதும்

மீண்டும் உன் பொய் உன்னை அழைக்க கூடும்
மீண்டும் நீ போக கூடும்
மீண்டும் என்னிடம் மறைக்க கூடும்
மீண்டும் என்னிடம் நீ பொய் சொல்ல கூடும்.

உண்மையால் இணைந்த உறவை
நீ பொய்யால் ஏமாற்றினாய்
உன் அன்பு இதற்கு மேலும்
உண்மை என்று நீ பறைசாட்டினாலும்

இன்னும் ஏமாளி ஆக
என் அன்புக்கு தைரியம் இல்லை.

நிந்தவூர் றிசாமா

உன் வேடம் தாங்கல்களை உண்மையாய் கேட்டேன் அதை எனக்கு வேஷமாய் தந்தாய் அதை சுட்டி உண்மையாய் இரு என்றேன் மீண்டும் என்னை ஏமாற்றினாய் என் அன்பும் அழுகையும் வெறும் இழுத்து பிடிப்பாய் உனக்கு உணர்த்தினாலும்…

உன் வேடம் தாங்கல்களை உண்மையாய் கேட்டேன் அதை எனக்கு வேஷமாய் தந்தாய் அதை சுட்டி உண்மையாய் இரு என்றேன் மீண்டும் என்னை ஏமாற்றினாய் என் அன்பும் அழுகையும் வெறும் இழுத்து பிடிப்பாய் உனக்கு உணர்த்தினாலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *