இரு வகை பெண்கள்
- by admin
- 14
மஹர் தந்து தன்னை விரும்பும் ஒருவரை இறைவன் தருவான் என எண்ணி பொறுமை காக்கும் பெண்களும் உள்ளனர். தானே தன் துணை தேட உரிமை உண்டு என தன் வாழ்வை தெரிவு செய்யும் பெண்களும் உள்ளனர்.
காதலித்தவன் கலங்குவான் என எண்ணி தன்னை பெற்றெடுத்தவர்களை மறந்து தன் எல்லை தாண்டியவளும் உண்டு. எவனோ அழுவதற்கு ஏன் நான் கலங்க வேண்டும் என நினைத்து பெற்றோரை சிரிக்க வைப்பவளும் உண்டு.
தன் கணவன் தொட வேண்டிய கையை எவனோ மூன்றாவது நபர் பிடித்து பேசுவதை விரும்புகிறாள் ஒருத்தி. தனக்கு நிச்சயமானவன் என அறிந்தும் தன் உரிமையாளனாய் அவன் மாறும் வரை, இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாள் இன்னொருத்தி.
காதல் மூலம் வரும் திருமணம் இன்பம் மிக்கது என கூறி காதல் செய்கிறாள் ஒருத்தி. திருமணத்தின் பின் தான் உண்மை காதல் என காத்திருக்கிறாள் ஒருத்தி.
நேரில் பேசினால் பிழை என போனில் பேசுகிறாள் ஒருத்தி. தனியாய் பேசுவது தவறு என பெற்றோர் முன் வைத்து பேசுகிறாள் ஒருத்தி.
மஹ்ரம் இல்லாதவன் முகத்தை நேரில் பார்த்து பேச ஊருக்கு பயந்து video call பேசுகிறாள் ஒருத்தி. மஹ்ரம் ஆனவன் நேரில் வந்து பேசும் போது தைரியமாய் பேசுகிறாள் ஒருத்தி.
கணவன் மனைவியாக பேசும் போது இறைவன் தரும் நன்மை பெறுகிறாள் ஒருத்தி. காதலர்களாய் பேசி பாவம் செய்கிறாள் ஒருத்தி
காதல் என்பது தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் மஹ்ரம் இல்லாத காதல் தவறுதானே…. அறியாமல் செய்தால் அதை தவறு என்கிறோம். தெரிந்து செய்தால் பிழை என்கிறோம்.
ஹராமான உறவை ஹலால் ஆக்க நினைத்து நீ கழிக்கும் ஒவ்வொரு நொடியையும் நீ எப்படி நம்புகிறாய் அது தொடர்ந்து நிலைக்கும் என்று.
உள்ளம் தடுமாறும் வயதும் இதுதான். உள்ளத்தோடு ஜிஹாத் செய்யும் பருவமும் இதுதான்.. இறை நம்பிக்கை தளராதே. உன் விருப்பம் அவன் அறிவான். அவன் நாட்டம் நீ அறிய மாட்டாய். நம்பிக்கை கொண்டு இரு கரம் ஏந்து… வெறும் கையோடு அவன் அனுப்பி வைக்க மாட்டான்.
உன் விருப்பத்தை ஹலாலாக ஆக்கி இறை அருள் பெரு. ஹராமாக ஆக்கி இறை கோபம் பெறாதே
A.M.F Sharmina
SEUSL
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
மஹர் தந்து தன்னை விரும்பும் ஒருவரை இறைவன் தருவான் என எண்ணி பொறுமை காக்கும் பெண்களும் உள்ளனர். தானே தன் துணை தேட உரிமை உண்டு என தன் வாழ்வை தெரிவு செய்யும் பெண்களும்…
மஹர் தந்து தன்னை விரும்பும் ஒருவரை இறைவன் தருவான் என எண்ணி பொறுமை காக்கும் பெண்களும் உள்ளனர். தானே தன் துணை தேட உரிமை உண்டு என தன் வாழ்வை தெரிவு செய்யும் பெண்களும்…