இங்கிருந்து அறிந்து பாதையை செப்பனிடுவோம்!
- by admin
- 9
இஸ்லாம் ஒரு மதமல்ல, மார்க்கம்! மதம் என்ற பதம் அதன் உருவாக்க காலம் மற்றும் அதன் புனிதப் பிரதியுடன் மட்டுமே இறுகித் தேங்கி விட்ட ஆன்மீக மற்றும் சட்டத் தொகுப்புகளையும் குறிக்கும். ஆனால் இஸ்லாம் ஒரு ‘மார்க்கம்’ எனும் வகையில் மனித அறிவுக்கு சிறப்பிடம் அளித்து இருக்கிறது. இந்த மனித அறிவின் பிரயோகத்தை தான் நாம் இஜ்திஹாத் என்று அழைக்கிறோம். அல் குர்ஆன், ஸுன்னா மற்றும் ஷரீஆவின் உயர் இலக்குகளை வைத்து மானிட அறிவின் பிரயோகம் உருவாக்கும் தொகுப்பை தான் நடைமுறையில் இஸ்லாமிய ஷரீஆ என்கிறோம். சமூக வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து செல்லும் அதன் தன்மை குறித்து இமாம் இப்னுல் கைய்யிம், இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி போன்றவர்கள் தெளிவுற எழுதி இருக்கிறார்கள். விரிவும், நெகிழ்வும் ஷரீஆவின் ஆதார இயல்பு.
‘முஸ்லிம்கள் இஸ்லாத்தினை ஒரு “மதமாக” புரிந்து கொண்டமை தான் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு அடிப்படை காரணம்’ என்கிறார் ஐரோப்பிய இஸ்லாமிய சிந்தனையாளரும் முன்னாள் பொஸ்னிய ஜனாதிபதியுமான அலி இஸ்ஸத் பெகொவிச். எமது சமகால பின்னடைவின் பகிரங்க ரகசியமும் இதுதான். முஸ்லிம்களின் வீழ்ச்சியினால் உலகம் இழந்தது என்னவென்று நிறைய பார்த்து விட்டோம். எமது ஆசிரியர் ஷெய்க் அல் கஸ்ஸாலி (ரஹ்) கூறுவது போல எப்படி வீழ்ந்தோம் என்பதை அறியாத எழுச்சியால் பயனில்லை. மீண்டும் விழிக்க வேண்டும் எனில் இன்றைய இஸ்லாமிய ‘மதம்’ பற்றிய தெளிவு அடிப்படை நிபந்தனை. எழுச்சிக்கான அடிப்படை நிபந்தனை!
லஃபீஸ் ஷஹீத்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
இஸ்லாம் ஒரு மதமல்ல, மார்க்கம்! மதம் என்ற பதம் அதன் உருவாக்க காலம் மற்றும் அதன் புனிதப் பிரதியுடன் மட்டுமே இறுகித் தேங்கி விட்ட ஆன்மீக மற்றும் சட்டத் தொகுப்புகளையும் குறிக்கும். ஆனால் இஸ்லாம்…
இஸ்லாம் ஒரு மதமல்ல, மார்க்கம்! மதம் என்ற பதம் அதன் உருவாக்க காலம் மற்றும் அதன் புனிதப் பிரதியுடன் மட்டுமே இறுகித் தேங்கி விட்ட ஆன்மீக மற்றும் சட்டத் தொகுப்புகளையும் குறிக்கும். ஆனால் இஸ்லாம்…