போர்வை முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்க இனவாதிகள் சதி

  • 71

 ARA.Fareel

முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லாகும். பொலி­ஸாரும் உள­வுப்­பி­ரி­வி­னரும் தாக்­கு­தல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை உடன் கைது செய்ய வேண்டும் என வர்த்­தக மற்றும் கைத்­தொழில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

போர்வை நகரில் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்­பாக இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­டாமை பற்றி கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களைத் தாக்கி அச்ச நிலையை உரு­வாக்­கு­வ­துடன் முஸ்­லிம்­களின் உடை­மை­க­ளையும் பொருட்­க­ளையும் கொள்­ளை­யி­டு­வ­தற்­கான திட்­டங்­க­ளுடன் சில இன­வாதக் குழுக்கள் களத்தில் இறங்­கி­யுள்­ளன.

அளுத்­கம வன்­செ­யலில் முஸ்­லிம்­களின் உடை­மை­களை சூறையா­டி­ய­வர்கள் மீண்டும் அவ்­வா­றான நிலை­மையை உரு­வாக்கி முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை கொள்­ளை­ய­டிக்க முயற்­சிக்­கின்­றனர்.இவ்­வா­றான முயற்­சி­களின் போது பொலி­ஸாரின் பங்­க­ளிப்பு முழு­மை­யாக வழங்­கப்­ப­டு­வ­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும்.

இவ்­வா­றான சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டா­த­வி­டத்து வர்த்­தக நிலை­யங்­க­ள் தாக்­கப்­ப­டு­வதை நிறுத்­து­வ­தற்கு முடி­யாது.
போர்வை நகர் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­குதல் தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டு தண்­டனை வழங்­கப்­பட்­டாலே எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றாது தடுக்க முடியும் என்றார்.

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், காணி உரிமைகள், வர்த்தகம் என்பன கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அரசாங்கம் விரைவில் இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

 ARA.Fareel முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லாகும்.…

 ARA.Fareel முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லாகும்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *