தனிமை
- by admin
- 8
கடந்த பொழுதுகளும்
இழந்த உறவுகளும்
துணையாய் நிற்கும்
ஆனாலும் அறை முழுவதும்
நிசப்தம்
மாயை நிறைந்த இப்பாரில்
ஒதுக்கப்படுகின்றேன்
உன்னோடு சேர்த்து
என் சிரிப்பில் தோழியாய்
என் சலனத்தில் சகோதரியாய்
என் வாழ்நாள் முழுதும்
என்னுள் கலந்து விட்டது
என் தனிமை
என் விழித்திரை
விம்பகள் முழுதும் கருமை மட்டும்
படர்ந்திருக்கும்
காரணம் நான் மட்டும்
வாழும் தனி உலகமது
துரோகங்கள் எனை வதைக்க
நான் எனக்கிட்ட கோடு தான்
தனிமை
விஷமிகள் நிறைந்த உலகம்
என்பதை
உணர்த்தியது என் தனிமை
என் சிரிப்பும்
என் அழுகையும்
தவழும் தாய் மடி தன்
என் தனிமை
இன்னும் உனை ரசிக்கின்றேன்
இன்னும் உனை வேண்டுகின்றேன்
ஏனெனல் உன்னுடன்
இருக்கையில் தான்
நிம்மதியை உணர்கின்றேன்
றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான்
ஹுதாயிய்யா
இலங்கை தென் கிழக்கு பல்கலைகழகம்
மருதமுனை
கடந்த பொழுதுகளும் இழந்த உறவுகளும் துணையாய் நிற்கும் ஆனாலும் அறை முழுவதும் நிசப்தம் மாயை நிறைந்த இப்பாரில் ஒதுக்கப்படுகின்றேன் உன்னோடு சேர்த்து என் சிரிப்பில் தோழியாய் என் சலனத்தில் சகோதரியாய் என் வாழ்நாள் முழுதும்…
கடந்த பொழுதுகளும் இழந்த உறவுகளும் துணையாய் நிற்கும் ஆனாலும் அறை முழுவதும் நிசப்தம் மாயை நிறைந்த இப்பாரில் ஒதுக்கப்படுகின்றேன் உன்னோடு சேர்த்து என் சிரிப்பில் தோழியாய் என் சலனத்தில் சகோதரியாய் என் வாழ்நாள் முழுதும்…