ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 16

வீட்டின் முன் கேட்ட ஓசைகள் அவர்கள் வந்துவிட்டனர் என்பதை உணர்த்தின. பர்ஹாவின் மனது படபடத்தது. முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை மெல்லத் துடைத்துக் கொண்டாள். அவளைப் பார்த்து புன்னகைத்த சிப்னா, ”ஒன்டும் பயப்புடாத… எல்லம் ஹைர்ஆ முடியும்” ”நீங்க வேற… அவளுக்கு பயமன்டியதே இல்ல… சும்ம சீன் காட்டிய…” பரீனா கூறியதுமே, ”போதும்…. போதும்…. வெளாடினது அவங்க வாற…” சித்தியும்மா பரபரப்பாக கூறிவிட்டுச் சென்றாள். மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்த பெண்கள் பர்ஹாவின் அறையில் உட்கார்ந்து கொண்டனர். வந்தவர்களுக்கு […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 15

ஷரீப தாத்தா ஏதேதோ யோசனைகளில் மூழ்கியிருந்தார். கடந்த காலத்தை நினைக்கவே சற்றுப் பயமாக இருந்தது. ‘சீ… எல்லம் அவசரமா நடந்து முடிஞ்சிட்ட… அல்லா தான் ஏன்ட புள்ளேட மனச கலங்கபடாம பாத்துகொலோணும்’ கண்களிலிருந்து இலேசாக எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளிகளை கைகளால் துடைத்துக் கொண்டாள். அவளது கண்களின் முன்பாக ஷிப்னாவின் முகம் நிழலாடியது. வட்டமுகத்தில் நீண்டிருந்த நாசி அதற்கேற்றது போல கண்ணிமைகளால் மூடியிருந்த பெரிய கண்கள் அடர்த்தியான புருவம் என அவளது அழகில் எந்தக் குறையையுமே சொல்ல […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 14

”சிப்னதாத்தா…” பர்ஹா அவளைக் கண்டதும் ஓடிச் சென்று கையைப் பற்றினாள். ”ஹேய். தாத்தாக இன்னும் வரல்லயா?  ” ”இன்னும் இல்ல… இப்ப வாராச்சும்…” ”ஹா… நாளேக்கென்டு தான் சென்ன… ஆனா இன்டேகி மறுபடி வாரன்டு….” அவள் பெருமூச்சு விட்டாள். ”ஹா… அதுகும் ஹய்ர்… எல்லம் நலவு தானே அல்லா நாடினா…” ”அதுகும் சரிதான்…” வீட்டின் முன்பு சத்தம் கேட்டு திரும்பியவர்கள், ”ஹா… வந்துட்டா… எந்தேன் கத…” பர்ஹாவைக் கண்ட சிப்னா சிரித்தாள். அவளது முகத்தில் பதற்றத்தைக் கண்டவள், […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 13

ஏதோ அசைவதை அவதானித்தவள் திரும்பிப் பார்த்தாள். ”சிப்னா….” என்று பஹீமா கூறியதுமே, ”என்ன மன்னிச்சிகோங்கோ நான் மொத அப்டி கத்தீச்ச படாது.” அவளது கைகளை ஆதரவாகப் பற்றி, ”போ புள்ள, அத உடு எல்லம் அவன்ட நாட்டம் நலவுக்கு தான் பழய கதய இழுக்க விரும்பல்ல எப்டீக்கும் நான் தான் ஒங்கள்ட மன்னிப்பு கேக்கோணும். நான் தானே அவனபத்தி செல்லி” அதற்கு மேல் பேசாமல் பஹீமா வாயை மூடிக் கொண்டாள். ”நீ எந்துகன் மன்னிப்பு கேக்கோணும். எல்லம் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 12

சித்தியும்மாவின் முகத்திலிருந்த பதற்றத்தை அவதானித்தவள், ”எந்தேன் விசயம் உம்மா… இவ்ளோ அவசரம்? ” ”இல்ல… மாப்ள ஒன்ன நாளேக்கி பாக்க வாராம்… இன்டேகி அவர் நாட்டுக்கு வாராம்… அப்டியே நாளேக்கி ஊட்டுக்கு வாரன்ட…. அதுதான்… ஒனக்கு நல்லொரு கிட் எடுக்கோணுமேன்…. வா டௌனுக்கு போக…” அவளுள்ளம் சற்று அதிர்ந்து நின்றது. ”அவசரமா…. இப்பவேவா?” ”ஓ…. வா போம்….” அவள் மௌனியாக நின்றுகொண்டிருந்தாள். ”தாத்தா…. வாசி தான் அப்ப…. போ… போ….” ”இவளொன்டு…. எப்ப பாத்தாலும் அவள கொளப்பி […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 11

”ஆ…. பஹீமா… வா … வா… ” ஷரீபதாத்தாவின் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர்ந்தன. ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்… எந்தேன் செய்தீக?” பஹீமா கேட்டுக்கொண்டே உள்ளே சென்றாள். ”அல்ஹம்துலில்லாஹ்… நாங்க நல்லம்…. நீங்க இப்டி திடீரென்டு வந்தீச்சி நம்பேலா….” ”நான் வார தானே இனி….” சிரித்துக் கொண்டே சமாளித்தவளை, ”போதும்… நீ கடசியா சிப்னாட கலியாணத்துக்கே வந்த…. அது நடந்தே ரெண்டு வரிஷமும் ஆகீட்ட….” பெருமூச்சுடன் கூறியவளின் கைகளைப் பற்றிக் கொண்டவள், ”சரி….சரி… அத உடுங்கோ…. எங்கேன் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 10

”எந்தேன் வாப்பா இவ்ளோ யோசின?” அவளைக் கூர்ந்து பார்த்தவர், ”இல்ல புள்ள குடும்பத்துல வார மொத கலியாணமேன்… அதுதான்…” புன்னகையை வரவழைத்துக் கொண்டு, ”அதெல்லம் ஹய்ரா நடக்கும்… நீங்க தலய பிச்சிகொல தேவில்ல…” பர்ஹாவின் வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தை உணர்ந்தவர் போல, ”மாப்புள ஒன்னோட பேசோணுமன்ட. கிட்டத்துல வாராம்…” அவர் அமைதியாக சொல்லிவிட்டு நகர்ந்தார். சித்தியும்மாவும், ”ஓ புள்ள… என்தியோ பேசோணுமாம் …. நல்லபடி நடக்கட்டும்…” ”சரியும்மா…. ஒகட விருப்பம்…” அவளது யோசனை எங்கோ சூனியத்தை நோக்கியதாக […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 09

”ஓ… புள்ள இந்த மாசம் தான்… தெரீம் தானே இப்பேக கலியாணத்த மிச்சம் காலத்துகு பேசி வெச்சேலா…. எப்டி சரி பிஞ்சி பெய்த்திடிய… அதான்… இவங்கட வாப்பாவே கேட்ட அவசரமாக கலியாணத்த நடத்தோம் என்டு…” சித்தியும்மா படபடப்புடன் கூறிவிட்டு நகர்ந்தார். அவரது முகத்தில் சந்தோசக்கலை எட்டிப்பார்த்தது. ‘யா அல்லா… ஏன்ட உம்மா, வாப்பாட மொகத்துல இந்தமாய் சந்தோசம் எப்போம் இருச்சோணும்’ பர்ஹாவின் மனது இறைவனை வேண்டியது. ”சரி… சரி…. எல்லம் ஹய்ர் தான்… அல்லா எந்த நாடீச்சோ […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 08

”ஓ… இப்ப தான்…. அவசரமாக ரெடியாகுங்கோ மகள்….” சித்தியும்மா பரபரப்புடன் கூறிவிட்டு சென்றார். அக்கா, தங்கை இருவரின் முகத்திலும் இனம் புரியாத உணர்வொன்று ஒட்டிக் கொண்டது. ”இப்டியே பாத்துகொண்டீந்தா இனி சரிதான்… வா ரெடியாக ” பரீனா அவளது கைகளை பிடித்துச் சென்றாள். சற்று நேரத்தின் பின், கலகலப்பான பேச்சுக்கள் சுவாரசியமான சம்பாஷணைகள் என வந்தவர்களால் வீடே மாறியது. பர்ஹாவிற்கோ ஆயிரமாயிரம் எண்ண அலைகள் ஓடி மறைந்தன. ”தாத்தா… அவங்க கலியாணத்த அவசரமாக இந்த மாசமே வெச்சிகொலோம் […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 07

பர்ஹா பரபரப்புடன் பரீனாவின் பின்னால் ஓடினாள். ”அடி… வாப்பா எந்துகன் கூப்புட்ட? ” அவளை மெதுவாகத் திரும்பிப் பார்த்த பரீனா, ”எனக்கு தெரியா? ஆனா… எந்தியோ நடக்க போற என்டு வெளங்கிய! ” அவளை கண்ணிமைக்காது பார்த்தவள், ”சரி… வா போம்..” இருவரும் வீட்டுக்குள் நுழைந்தவுடனே சித்தியும்மா பர்ஹாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு முன்னறையின் பக்கமாக நடந்தாள். ”உம்மா எந்தேன் நடக்கிய இங்க? ” மௌனமாகவே நடந்து சென்றாள். அந்த அறையில் பர்ஹாவின் வாப்பா தீவிரமாக ஏதோ […]

Read More

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 06

”ஏய்…. என்னயே எந்துகன் பாத்துகொண்டீச்சிய செல்லுவே?” பர்ஹாவிற்கு அவளது முகத்தில் ஆயிரமாயிரம் பாவனைகள் தெரிந்தது. சட்டென கைகளைப் பற்றி, ”அவ… அவ நிச்சி சும்மா…. அவ ஒன்டும் செல்லல்ல….” ”பொய் செல்லாத… அவவ பத்தி எனக்கு தெரீம்… நான் தலாக் வாங்கின பொம்புலயன்டு ஏசின தானே?” ”அப்டி ஒன்டுமில்ல…. தெரீம் தானே அவட வயசுக்கு சும்ம ஒளம்பிய…. அத கனகெடுகக் வேணம்….” ஏளனமான புன்னகையை உதிர்த்தவள், ”அவ செல்லியதும் சரி தான் இனி….. இந்த சமூகமே பொம்புளேக்கி […]

Read More

கரண்ட் இல்லை

எனக்கு ஏன் இப்படி வியர்த்துக் கொட்டுகிறது. எங்கும் இருள் சூழ்ந்திருக்கின்றது. ஒவ்வோர் அடியாக மெதுவாக எடுத்து வைக்கிறேன். இங்கே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திக்கு என்னவானது… முழுதும் உருகி விட்டதா…? “பேதமை என்பது யாதெனில் ஏதம் கொண்டு ஊதியம் கைவிடல்” மகள் பாடம் செய்யும் குரல் மெதுவாய் ஒலிக்கிறது. இன்னும் சிறிது முன்னோக்கி நகர்கிறேன். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மகள் படித்துக்கொண்டிருக்கிறாள். “மகள்… மகள்….” என்று அழைக்கிறேன். என் குரல் வெளிவருவதில்லை. எனக்கு என்ன ஆகிவிட்டது என தடுமாறியவளாக மீண்டும், […]

Read More

கறுப்பு ஏப்ரல்

2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள். 2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது. அது ஒரு புதன் கிழமை, பாடசாலை முதலாம் தவணையின் இறுதி நாள்; அனைத்து அரச பாடசாலைகளும் விடுமுறை வழங்கும் நாள்… அன்று தன் தந்தையிற்கு மட்டும் தான் பாடசாலை இருந்தது (அவர் ஒரு பிரதி அதிபர் என்பதால்). மற்றவர்கள், தங்கைக்கும், 2 சகோதர தம்பிகளுக்கும் முன்னேற்ற அறிக்கை (Progress […]

Read More

வாட்ஸ்அப் க்ளாசும் வளரும் மாணவிகளும்

அவள் பெயர் ரஹ்மா. சாதரண தரப்பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கும் மாணவி. சிங்களம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராவலில் அவளது தோழி அனுப்பிய சிங்கள வகுப்பில் வாட்ஸ்அப் மூலம் இணைந்து கொண்டாள். முக்கியமாக அது பெண்களுக்கான வகுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இணைய முன்னர் அவளது பெயர், ஊர், வயது, கல்வி தகைமை என்பன தனிப்பட்ட முறையில் அட்மினுக்கு குரல் பதிவிட (Voice clip) வேண்டும் என்று கட்டளை இடப்பட்டதை அடுத்து அவளும் கேட்கப்பட்ட […]

Read More

உயிர்பெற்ற உன்னத உறவு

கதிரவன் தன் கிரகணத் தூரிகையால் வான்மகளுக்கு வண்ண ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அழகிய காலைப்பொழுதில் தன் மனதைப் பறிகொடுத்திருந்த ஹப்ஸா பெல்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தாள். காலைக் காட்சிகள் கண்ணைக் கவர்ந்தாலும், உள்ளத்தைக் காந்தமாய்க் கவர்ந்திழுத்தாலும் இனம்புரியா இருளொன்று அவளது உள்ளத்தில் இருக்கத்தான் செய்தது. தன் அறைத்தோழி ஆய்ஷாவுடன் அதே பெல்கனியில் அமர்ந்து அரட்டையடித்த வண்ணம் தேனீர் பருகிய அந்த அழகிய நாட்கள் உள்ளத்தில் இனித்திட, ஸுபஹ் தொழுகையின்றி ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆய்ஷாவை கவலையுடன் நோக்கினாள். […]

Read More

யார் குற்றவாளி – சிறுகதை

கொடபிடியவில் நடுப்பகலில் திருட்டு – மாணவன் ஒருவன் சந்தேகத்தில் கைது அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட கொடபிடிய கிராம சேவகப் பிரிவில் நேற்று (24.01.2018) பிற்பகல் திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் கொடபிடியவில் வயலோரமாகவுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவத்தில் வீட்டுரிமையாளரின் மனைவியின் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதென சந்தேகிக்கத்தின் பேரில் பதினைந்து வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். […]

Read More

எந்த ஆணுக்கும் ‘மலடன்’ என்ற பட்டத்தை யாரும் சூட்டியதில்லை

அவளோடு சில நொடிகள் தொடர் -15 ஒவ்வொருவருடைய மன நிலைகளும் கவலையில் ஆழ்ந்திருந்தன. இன்று என்ன நடக்கும் இல்லை. நாளை தான் என்ன நடக்கும். ஸிராஜின் தாயாரை எப்படி சமாதானப் படுத்துவது. அவள் தான் பிடிவாதக்காறியாயிற்றே இப்படி இணங்கிப் போவாள். அவள் நினைத்தபடி அவனுக்கு எப்படியும் இரண்டாம் திருமணம் செய்து வைத்து விடுவாளே. என்று எண்ணும் போதே உள்ளங்கள் கணத்தன எதுவும் செய்ய முடியாமல் பதறித் துடித்தன. ஆளுக்கால் யோசனைக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தார்கள். நடந்த நிகழ்வுகளை […]

Read More

ஒளிக் கீற்று

அது ஒரு அழகிய கிராமம். நான்கு திசைகளில் ஓரு அழகான அருவியும், மறுபுரம் பார்தால் பச்சைப் பசேல் என்ற வயல் வெளியும், மற்றைய பக்கம் பார்த்தால் வாழைத் தோட்டமும், மறுபுரத்திலே பாடசாலையும், அழகான நான்கு மதங்களும் அடங்கிய வணக்கஸ் தளங்களும் காணப்படும் கிராமம் அது. அவ்வூரிலே ஓரு வழக்கம் காணப்பட்டது. “பொம்பள புள்ளகள படிக்க வெச்சா தலக்கி மேல பெய்துடுவாங்க” “என்னதான் படிச்சி செய்யப் போராளுவள்; கூட படிக்க வெச்சா அவங்கள புடிக்க ஏழாம பொயிடும்” என்ற […]

Read More

அவளுக்கு ஒரு புள்ள பெத்து தாரதுக்கு வக்கு இல்லியே

அவளோடு சில நொடிகள் தொடர்-14 “வாங்க வாங்க மாமி நல்லா இருக்கிங்களா? மாமா மறுவா வீட்டுல எல்லாரும் எப்புடி நல்லா இருக்காங்களா?” “இருக்க்கம் இருக்கம், எங்க ஸிராஜ் அவனுக்கு நான் குடுத்திருந்த இரண்டு வருசமும் முடிஞ்சி. இனி ஒரு ஒரு நிமிசம் கூட அவன் இங்க இருக்கக் கூடாது. எங்க அவன்.” திக்கென்றிருந்தது ஜெஸீறாவிற்கு பட படவென அவளது இதயம் அடித்துக் கொண்டது. புயலடித்து ஓய்ந்து போய் மீண்டுமது பெரும் சூறாவளியாக உருப் பெற்றது போல் இருந்தது […]

Read More