காணாமல் போனது கண்ணில் தென்படும் வரை..
- by admin
- 10
சில நிமிடங்கள் என் இதயத்துடிப்பின் சப்தத்தை உணர்தேன்…
அது உனக்கென்னவோ ஆயிவிட்டதென்று…
பெற்றவர்களின் வியர்வையை சற்று சுவைத்தேன்…
அது நீ எங்கோ தொலைந்துவிட்ட போது…
மொழிவது எப்படி
என்று தடுமறினேன்…
அது நீ என்வசம் இல்லாத போது…
மௌனமாய் என்னுள்ளே புதைந்து அழுதேன்..
அது நீ என்னை விட்டு பிரிந்து விடுவாயோ என்ற பயத்தில்…
என்னுள் நானே இறையுறுதி பூண்டுகொண்டேன்..
அது நீ எனக்கு கிடைத்து விட வேண்டும் என்று…
தூக்கம் கலைந்தேன்
சொப்பனத்தில் தேடி அழைந்தேன்
அது எங்கே
என் நீயேன்று…
பதற்றத்தில் அழைந்தேன்
குழப்பத்தில்
மிதந்தேன்..
அது என்னை நீ துரந்திடுவாயோ என்று..
கிடைத்து விட்டாய்
கிழக்கில் உதித்த சூரியனாய்…
கண்ணில் தெரிந்து
விட்டாய் காணல்நீரின் காவியமாய்….
இறைவனுக்கு நன்றி
இறையோனுக்கே நன்றி
இறைவனுக்கு மட்டுமே நன்றி….
Asana Akbar
Anuradhapura
SEU Of Srilank
a
சில நிமிடங்கள் என் இதயத்துடிப்பின் சப்தத்தை உணர்தேன்… அது உனக்கென்னவோ ஆயிவிட்டதென்று… பெற்றவர்களின் வியர்வையை சற்று சுவைத்தேன்… அது நீ எங்கோ தொலைந்துவிட்ட போது… மொழிவது எப்படி என்று தடுமறினேன்… அது நீ என்வசம்…
சில நிமிடங்கள் என் இதயத்துடிப்பின் சப்தத்தை உணர்தேன்… அது உனக்கென்னவோ ஆயிவிட்டதென்று… பெற்றவர்களின் வியர்வையை சற்று சுவைத்தேன்… அது நீ எங்கோ தொலைந்துவிட்ட போது… மொழிவது எப்படி என்று தடுமறினேன்… அது நீ என்வசம்…