மனநிம்மதி
- by admin
- 12
அகமெனும் மனையதிலே
நிம்மதியெனும் ஒளிக்கீற்றை
நிரந்தரமாய் – நீ பெற்றிடவே
புரட்டிடு குர்ஆனதை
புரிந்திடுவாய்-பல்லுண்மைகளை!
கண்காணா சுவனமதின்
சுவாரசியங்கள் – உன்னைக் கவர
களியாட்ட நிகழ்வுகளும்
கரைந்து விடும் – அந்நொடியில்
சோதனைகள் பல சுமந்திங்கு
சாதனைகள் பல புரிந்திட்ட
சத்திய தூதர்களின் வரலாற்றை
சற்றே நீ மீட்டிட்டால்
சளிப்பாய் – உன் சோதனையை
“இதுவல்ல தோதனையென்று”
தாழ்ந்தோனின் நிலை கண்டு
தயாளனைப் புகழ்ந்தங்கு
தாம் பெற்ற அருளுக்காய்
நன்றிகள் பல நவில்ந்திட்டால்
அடைவாய் – நீ நிம்மதியை!
பார்ப்போர்க்காய் என்றன்றி
படைத்தவனுக்காய் என்றாகி
தொடர்ந்திட்டால் வேலைகளை
தொட்டிடலாம் – நிம்மதியை!
பாரமான உள்ளமதை
பொறுப்பாளன் அல்லாஹ்விடம்
பொறுமையுடன் சாட்டிட்டால்
பெறுவாய்-நீ நிம்மதியை!
“அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலமே இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க” (13:28)
J.Noorul Shifa (SEUSL)
அகமெனும் மனையதிலே நிம்மதியெனும் ஒளிக்கீற்றை நிரந்தரமாய் – நீ பெற்றிடவே புரட்டிடு குர்ஆனதை புரிந்திடுவாய்-பல்லுண்மைகளை! கண்காணா சுவனமதின் சுவாரசியங்கள் – உன்னைக் கவர களியாட்ட நிகழ்வுகளும் கரைந்து விடும் – அந்நொடியில் சோதனைகள் பல…
அகமெனும் மனையதிலே நிம்மதியெனும் ஒளிக்கீற்றை நிரந்தரமாய் – நீ பெற்றிடவே புரட்டிடு குர்ஆனதை புரிந்திடுவாய்-பல்லுண்மைகளை! கண்காணா சுவனமதின் சுவாரசியங்கள் – உன்னைக் கவர களியாட்ட நிகழ்வுகளும் கரைந்து விடும் – அந்நொடியில் சோதனைகள் பல…