அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 30

  • 60

“ரியூகி! எப்படி என் மனச புரிஞ்சிகிட்டே?” என கேட்டாள் அலைஸ்.

“நீ கூட இருந்த போது அதபத்தி யோசிக்க முடியல. நீ என்னை விட்டு போனபிறகு தான் நீ இல்லாம எனக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்தேன்.” என்றான்.

“ஓஹ்… அப்போ மறுபடியும் எங்கயாவது போகட்டுமா?”

“இன்னொரு முறை அப்படி நினைச்சு கூட பார்த்து விடாதே… நீ இல்லாமல் என்னால ஒரு செக்கன் கூட இருக்க முடியாது.” என்று அவன் சொல்ல அவனை இறுக்கி அணைத்து கொண்டே சென்றாள்.

மறுபுறம் கியோன், “அங்க பாரு அலைஸ் என்ன பண்ணுறான்னு. நீயும் இருக்கியே… சும்மா பேச்சுக்காவது ‘நீ இல்லாமல் எனக்கு இருக்கவே முடியாது’என்று சொல்லி இருக்கியா?”

“ஆஹா சொல்லுவேனே…” என்றவள் சட்டென அவனை முத்தமிட்டாள்.

“எல்லாத்தையும் கேட்டு வாங்க வேண்டி இருக்கிறது” என்று சொல்லி கொண்டான்.

மறுபுறம் நயோமி சின் கே விடம், “என்ன எதுவுமே பேசாம வர்றீங்க?” என கேட்க,

“அதான் நான் பேசவேண்டிய எல்லாம் அவன் பேசிட்டு வரானே.” என்று கடிந்து கொண்டே கூற,

“ஓஹ்… அலைஸ் விஷயமா! அக்கா சொன்னாங்க… நீங்க அவளை…”

“நாம வேற ஏதாவது பேசலாமே.” என்று அவனும் சொல்ல அமைதி நிலவியது.

இப்படியாக சில்வேனியாவை அடைந்ததும் அலைஸ் கையில் அம்புக்குறி காட்ட ஆரம்பித்தது. அந்த திசையில் தான் நாகடோ எங்காவது இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டனர். ஒருவன் கடையில் தன் மனைவியுடன் நின்று பொருட்கள் வாங்கி கொண்டிருந்தான். சின் கே அவனை கண்டதும் அவனும் ஆத்திரப்பட்டு இருவரும் ஆளுக்காள் கோபத்தில் தாக்குவதற்கு ஓடிவர எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். அருகே வந்து ஒருவரை ஒருவர் கட்டி தழுவி நட்பு பாராட்டினார்கள். அலைஸ் கையில் அம்புக்குறி மறைந்தது.

“கோரின் அப்படின்னா… இவர்.”

“நாகடோ…”

சின் கே தன் நண்பன் லீயையும் அவன் மனைவி நுரீகோவையும் இவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

“நான் சொல்லல… இவன் தான் என்னோட நண்பன் லீ. இவங்க இவனோட மனைவி நுரீகோ.” என்றான்.

நயோமி சந்தேகத்தில்,

“லீயா…” என்று கேட்டாள்.

“அவரோட மனைவியா?” என்று அலைஸ் வியந்தாள்.

கோரின் அவனை,

“நாகடோ” என்று அழைக்க லீ ஆச்சரியப்பட்டான்.

“என்ன?” என்று சின் கே அதிர்ச்சியோட கேட்டான்.

“ஓஹ். மை… என்னோட பெயர் எப்படி உங்களுக்கு தெரியும்?”

“அண்ணா… நாங்கதான் உன்னோட சகோதரிகள். அலைஸ், நயோமி, நான் கோரின்.” என்றாள்.

மகிழ்ச்சி கலந்த குழப்பத்தில் சின் கிட்ட,

“என்னடா நடக்குது இங்கே?”

“அட நீ வேற… உன்னை எப்படி கூப்பிறதுன்னு நானே குழம்பி போய் இருக்கேன்.”

“சரி சரி வருத்தப்படாதே… நாம எப்பவும் போல நண்பர்களே தான்.” என்றான் நாகடோ.

“சாரிப்பா… உங்க வீட்டுக்கு எந்த பக்கம் போகணும் என்னு சொல்லுங்க. அடிக்கிற வெயிலுக்கு மூளை எல்லாம் உருகிடும் போல இருக்கு.”என்றான் கியோன்.

“வாங்க வாங்க… பக்கத்தில தான் இருக்கு.” என்று நுரீகோ அவர்களை எல்லாம் அழைத்து கொண்டு சென்றாள். அது பெரிய வீடுதான்… எல்லோரும் அங்கு சென்று சேர்ந்ததும் இளவரசிகள் மூவரும் அண்ணியை கலாய்த்து கொண்டிருந்தனர். மறுபுறம் சின் கே தன் நண்பனுடன் அளவளாவி கொண்டிருந்தான்.

“என்னால நம்பவே முடியவில்லை நீ ஒரு பிரின்ஸ் என்னு இவ்வளவு காலமும் தெரியாம போச்சே. நம்ம மாஸ்டர் கூடோ கிட்ட நாம வாங்கின பணிஷ்மண்ட். காட்டிய சேட்டைகள் எதுவும் மறந்து போகல.”

“ஆமா டா… மாஸ்டரை ரொம்ப மிஸ் பண்ணுறேன்” என்றான்.

“உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும். கொஞ்சம் தனியா…” என்று சின் அவனை வீட்டுக்கு பின்புறம் அழைத்து சென்றான்.

*********************************

“இந்த சின் கே பற்றி என்ன நினைக்கிற கியோன்?”

“அவன் ரொம்ப நல்லவன் பா.” என்று விட்டு ரியூகி முறைப்பதை கண்டு ஓடிவிட்டான்.

தொடரும்……
ALF. Sanfara.

“ரியூகி! எப்படி என் மனச புரிஞ்சிகிட்டே?” என கேட்டாள் அலைஸ். “நீ கூட இருந்த போது அதபத்தி யோசிக்க முடியல. நீ என்னை விட்டு போனபிறகு தான் நீ இல்லாம எனக்கு ஏற்பட்ட வலியை…

“ரியூகி! எப்படி என் மனச புரிஞ்சிகிட்டே?” என கேட்டாள் அலைஸ். “நீ கூட இருந்த போது அதபத்தி யோசிக்க முடியல. நீ என்னை விட்டு போனபிறகு தான் நீ இல்லாம எனக்கு ஏற்பட்ட வலியை…

7 thoughts on “அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 30

  1. Hi there, just became aware of your blog through Google, and found that it’s really informative. I am going to watch out for brussels. I will appreciate if you continue this in future. A lot of people will be benefited from your writing. Cheers!

  2. I am often to blogging and i really appreciate your content. The article has really peaks my interest. I am going to bookmark your site and keep checking for new information.

  3. As I site possessor I believe the content matter here is rattling excellent , appreciate it for your hard work. You should keep it up forever! Good Luck.

  4. I am usually to blogging and i actually admire your content. The article has actually peaks my interest. I am going to bookmark your site and preserve checking for new information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *