குரங்கு மனசு பாகம் 49
- by admin
- 18
அழகான காலை புதுத்தெம்புடன் பூக்க, கணவனை ஆபிஸ் அனுப்பும் பதட்டத்தில் சமையலறையில் பம்பரமானாள் சர்மி.
“ஹபி ஹபி…” மனைவி பதட்டமாய் சுழன்றாலும் அதீக் இன்னும் எழுந்திருக்கவேயில்லை.
“ஹபி டீ ரெடி, எழும்புங்க அவசரமா” செவிடன் காதில் சங்கூதிய நிலையாய் அவன் தான் எதையும் வாங்கிக் கொண்டதாய் விளங்கவில்லை.
“ஹபி, என்னடா இன்னமும் எழும்பாம, டெய்ம் எண்ணான்டு பாருங்க…” அறைக்குள் விரைந்தவள் மீள் தட்டி எழுப்ப, மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
“ஹே என்னடா இது? இப்போ தண்ணி தான் பேசும், இரியுங்க வாரன்” வெளியில் செல்ல முனைந்தவளின் கைற்றி நிறுத்தினான் அதீக்.
“என்ன ஹபி?”
“நைய்ட் தூங்க விட்டியா நீ? இப்போ வந்து எழுப்பினா எப்புடி எழும்புவன்?”
“நான் ஆஹ்? நான் என்ன செஞ்சன்?”
“ஒன்னுமே இல்லம்மா…” நக்கலாய் சிரித்தவனை முறைத்துப் பார்த்தாள்.
“ஹே என்னடிம்மா இந்தப் பார்வ? வா… வா இப்புடி பக்கத்துல.”
“எதுக்கு?”
“வாயேன் சொல்ல”
“ஹ்ம்ம சொல்லுங்க…”
“என் பேபிம்மா வந்துட்டாளா?” மனைவியின் வயிற்றைப் பிடித்துக் கேட்க, பொய் கோவத்துடன் எழுந்து நின்றவள்.
“இப்போ எழும்ப போறீங்களா? இல்லையா?” கொஞ்சம் கடுமையாகக் கத்தினாள்.
“சர்மிம்மா மூக்கு நுனியில என்னமோ இருக்கு, தட்டிக்கிறியா?” மீண்டும் மனைவியை நையாண்டி பண்ண, கட்டில் தலையணையை தூக்கி கணவனின் பின்புறம் அடித்தாள்.
“என் பொண்டாட்டி எனக்கு அநியாயம் பன்றாங்க, ஆய்… யாராலும் வந்து காப்பாத்துங்க” அவன் கத்த, அவள் அடியும் கொஞ்சம் அதிகமாயிருந்தது.
“உம்மா தங்கமே! நான் எழும்பிட்டன், இப்ப ஹெபியா?”
“டீ யத் திரும்ப சூடு காட்ட மாட்டன், ஆறியிருந்தாலும் குடியுங்க…”
“கோவத்திலும் அழகாத் தான் இருக்க…”
“ஹீ…” பதிலுக்கு சிரித்தவள், சிட்டுக்குருவியாய் பறக்க, தன்னை ஆயத்தப்படுத்துவதில் அவசரமானான் அதீக். அந்தக் கொஞ்ச நேரத்திலும்,
“சர்மி அது எங்க, இது எங்க?” என எத்தனையோ தடவைகள் கூப்பாடு போட்டவனை பார்த்து சிரித்தவளாக மகளுக்கு உதவியாய் சமையலறைக்கு வந்தாள் ராபியா.
“நீங்க போங்கம்மா, சாப்பாடு ரெடி பண்ணிட்டன்.” சொல்லிக் கொண்டே பொதி கட்டியவள் எடுத்து வரும்போது அதீக் கிளம்புவதற்கு தயாராய் இருந்தான்.
“இந்தாங்க ஹபி, பேக் ல போட்டுக் கோங்க, ஷூ பொலிஷ் பண்ணி வெளிய வெச்சிருக்கன். டை ய எடுத்தீங்களா? போன், பேர்ஸ், எல்லாம் ஓகே யா?”
“ஓகே! ஓகே பேபி ரிலக்ஸ்…”
பாவமாய் மனைவியை பார்க்க, அவள் களைப்புக்கு ஒத்தடமாய் கணவன் தரப்பிலிருந்து எதிர்பார்ப்பது வெறும் இரண்டு முத்தங்கள் மட்டுமே. தனக்கு விரும்பியவள் துணைவியாய் வாய்ந்திருக்க, இந்த முத்தங்களுக்கு அதீக் தரப்பிலிருந்து பஞ்சம் இருக்குமா என்ன?
அழகு மனைவியை பாசமாய் வருடிவிட்டவன், கன்னம் நிறைய முத்தங்களைப் பதித்து, கவனமாய் இருக்கச் சொல்லி விடைபெற வாயில் வரை சென்று தன்னவனை வழியனுப்பி விட்டு அடுத்த கருமங்களை கவனிக்கலானாள்.
கதை தொடரும்…
Aathifa Ashraf
அழகான காலை புதுத்தெம்புடன் பூக்க, கணவனை ஆபிஸ் அனுப்பும் பதட்டத்தில் சமையலறையில் பம்பரமானாள் சர்மி. “ஹபி ஹபி…” மனைவி பதட்டமாய் சுழன்றாலும் அதீக் இன்னும் எழுந்திருக்கவேயில்லை. “ஹபி டீ ரெடி, எழும்புங்க அவசரமா” செவிடன்…
அழகான காலை புதுத்தெம்புடன் பூக்க, கணவனை ஆபிஸ் அனுப்பும் பதட்டத்தில் சமையலறையில் பம்பரமானாள் சர்மி. “ஹபி ஹபி…” மனைவி பதட்டமாய் சுழன்றாலும் அதீக் இன்னும் எழுந்திருக்கவேயில்லை. “ஹபி டீ ரெடி, எழும்புங்க அவசரமா” செவிடன்…