வரைந்திட முடியாத வலிகளில் இருந்து சில…
- by admin
- 26
எதுவும் நினைத்திட
வேண்டாது நான்
எதுவும் எழுதிட
வரவில்லை….
கற்பனையாய் எழுதிட
வந்தேன் என்று
நினைத்திட்டு போயிட
வேண்டாம் மாறாக
வாசிக்காமலும் போகிட
வேண்டாம்….
வலிகளை கூற
வழிகளில்லை அதனாலே
இந்த வரிகள்….
வரைந்து வைத்தது
எல்லாம் மறைந்து
கொண்டு போகின்றது
எதனால் எனத்
தெரியவில்லை எனக்கு…
தப்பித்து போகலாம்
என நினைத்தேன்
எழுதிப் பழகிய
கைகளையும் விளங்கிட
நினைத்தேன் அது
மறந்திடாது மீண்டும்
எழுதிட துடிக்கின்றது….
கண்ணீர்களை கொஞ்சமாய்
வடிக்கலாம் என
இருந்தேன் இங்கு
கண் இல்லாமல்
கிடக்கின்றேன் வலிகளுடன்….
எனக்காய் கொஞ்சம்
பரிதாபம் கொள்ள
யாருமில்லை எனத்
தெரியும் எனக்கு
என் உறவுகளைத்
தவிர அதனால்
புலம்பி கிடக்கின்றேன்
இந்த முகமறியாத
முகநூலில் இன்று….
உங்கள் நேரம்
என்னால் வீனடிக்கப்பட்டது
என்றால்
என்னை மன்னித்துப்
போவீர்களா…!!
பொத்துவில் அஜ்மல்கான்
எதுவும் நினைத்திட வேண்டாது நான் எதுவும் எழுதிட வரவில்லை…. கற்பனையாய் எழுதிட வந்தேன் என்று நினைத்திட்டு போயிட வேண்டாம் மாறாக வாசிக்காமலும் போகிட வேண்டாம்…. வலிகளை கூற வழிகளில்லை அதனாலே இந்த வரிகள்…. வரைந்து…
எதுவும் நினைத்திட வேண்டாது நான் எதுவும் எழுதிட வரவில்லை…. கற்பனையாய் எழுதிட வந்தேன் என்று நினைத்திட்டு போயிட வேண்டாம் மாறாக வாசிக்காமலும் போகிட வேண்டாம்…. வலிகளை கூற வழிகளில்லை அதனாலே இந்த வரிகள்…. வரைந்து…