மனதில் நுழைந்து போன சில வரிகளில் இருந்து!

  • 9

வசதியான உலகம்
இது மனதார
பார்த்து வாழாத
நகரமும் இது….

வஞ்சகம் நிறைந்து
கிடக்கும் பூமி
இது பஞ்சம்
கொண்டு வாழும்
மனிதர்களும் வாழும்
இடம் இது….

பாசங்கள் யாவும்
பணங்களாய் போன
யுகம் இது….
பசியாரது உண்ணாத
மானிடர்களும் உள்ள
இடம் இது….

அதிசயங்கள் நிறைந்திட்ட
பூமி இது….
சுவாரசியங்கள் திகழந்திடாத
உலகமும் இது….

காமம் தலை
தூக்கி ஓடும்
உலகம் இது….
நாகரிகமும் விரைவாய்
வளர்ந்து வரும்
யுகமும் இது….

இவைகளைக் கூறிப்
போகையில் எவையோனும்
என்னை கொண்டு
போய்விடும் நான்
நின்று போக
வழிகள் இல்லாது
வலிகளுடன் பயணிக்கும்
காலம் ஆகிவிடும்….

இங்கு உண்மைகளை
கூறினால் ஊமையாக்கி
போய்விடுவார்கள்
அதனால்தான் ஏதோ
மனம் போகும்
வழியில் வரைந்து
வைத்துள்ளேன் பிடிக்கும்
என எண்ணி….

பொத்துவில் அஜ்மல்கான்

வசதியான உலகம் இது மனதார பார்த்து வாழாத நகரமும் இது…. வஞ்சகம் நிறைந்து கிடக்கும் பூமி இது பஞ்சம் கொண்டு வாழும் மனிதர்களும் வாழும் இடம் இது…. பாசங்கள் யாவும் பணங்களாய் போன யுகம்…

வசதியான உலகம் இது மனதார பார்த்து வாழாத நகரமும் இது…. வஞ்சகம் நிறைந்து கிடக்கும் பூமி இது பஞ்சம் கொண்டு வாழும் மனிதர்களும் வாழும் இடம் இது…. பாசங்கள் யாவும் பணங்களாய் போன யுகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *