கொரோனா
- by admin
- 14
மனிதனுக்கு பெயர் தேடும் காலம்மாறி
மரணத்திற்கு பெயர் தேடும் காலம் தோன்றிவிட்டது.
அநீதங்களும் அட்டூழியங்களும் கட்டவவிழ்க்கப்படுகையில்
ஆங்ரோஷமான ஏதோ ஒன்று தலைதூக்குகின்றது.
மனிதம் தொலைந்து பல தசாப்தங்கள்
ஆவதால்தான் அழிவது அழியட்டும் என்று
இனமத,இடத்தியல் வாதம் பேசுகிறது உலகு.
வைரஸ் பரவுகிறது ஓரளவே
இங்கு போலி வதந்திகள் பரவுகிறது ஏராளமாக
புதிதாய் ஒரு நோய் உருவெடுக்கையில்
ஊரிலிலுல்லவர் எல்லம் வைத்தியர் ஆகிடுவர்.
இன்று கொரோனா எனும்பெயரில்
பீதிக்கி மத்தியில் பாதி வாழ்க்கை சுழல்கிறது.
நகைச்சுவைக்கு நல்லதோர் சந்தர்ப்பம்
ஆனால் அதில் அகப்பட்டவனுக்குதான்
அல்லலும் துன்பமும்.
உனக்கு மட்டும் பிரார்திக்கும் சுயநலவாதிபோதும்
ஒரு முறையேனும் உலகுக்குமாய் கையேந்திடு.
அஸானா அக்பர்
மனிதனுக்கு பெயர் தேடும் காலம்மாறி மரணத்திற்கு பெயர் தேடும் காலம் தோன்றிவிட்டது. அநீதங்களும் அட்டூழியங்களும் கட்டவவிழ்க்கப்படுகையில் ஆங்ரோஷமான ஏதோ ஒன்று தலைதூக்குகின்றது. மனிதம் தொலைந்து பல தசாப்தங்கள் ஆவதால்தான் அழிவது அழியட்டும் என்று இனமத,இடத்தியல்…
மனிதனுக்கு பெயர் தேடும் காலம்மாறி மரணத்திற்கு பெயர் தேடும் காலம் தோன்றிவிட்டது. அநீதங்களும் அட்டூழியங்களும் கட்டவவிழ்க்கப்படுகையில் ஆங்ரோஷமான ஏதோ ஒன்று தலைதூக்குகின்றது. மனிதம் தொலைந்து பல தசாப்தங்கள் ஆவதால்தான் அழிவது அழியட்டும் என்று இனமத,இடத்தியல்…