ஒன்று சேர்ந்த குடும்பங்கள்
- by admin
- 22
ஆடி ஓடி விளையாடிய கால்களை
கட்டி போட்டு கோரோன வந்து
நம்மை ஒன்று சேர்த்தது
ஊரடங்குச்சட்டம் என்ற பெயரில்
பிரிந்திருந்த குடும்பங்கள்
அத்தனையும் ஒன்றாய் மாரி
குதூகலம் இன்றி போனாலும்
குடும்பத்தோடு வாழும்
நிலையை தந்து சென்றது
இன்றைய ஊரடங்குச் சட்டம்
தினக்கூலியாக உழைத்து
உண்ணும் உறவுகளுக்கு
உண்ண உணவு இன்றி போனாலும்
உள்ளத்தில் ஏதோ சற்று
இன்பம்தான் தந்து செல்கிறது
இன்றைய ஊரடங்கு சட்டம்
சுதந்திரமாய் சுற்றித் திரிந்த உறவுகள்
இன்று வீடுகளில் அடைபட்டு வாழ
ஊரடங்குச் சட்டம் போட்டார்கள் ஆனால்
சுதந்திரத்தைப் பறித்த கோரோனா
இன்று சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது உலகில்
எதற்காக இந்த ஊரடங்குச் சட்டம்
என்று அறியாத சில உறவுகள்
சட்டங்களை மீறி சிறைச்சாலையில்
உன் உயிரை காப்பாற்றத்தான்
இந்த ஊரடங்குச்சட்டம்
உயிர் பறிக்கும் கோரோனாவை விரட்ட
நாமும் படையெடுத்து செல்ல வேண்டியதில்லை
பாதுகாப்பாய் வீடுகளில் இருப்போம்
கவிதை காதலன்
அக்குறணை லஷாட்
[cov2019]
ஆடி ஓடி விளையாடிய கால்களை கட்டி போட்டு கோரோன வந்து நம்மை ஒன்று சேர்த்தது ஊரடங்குச்சட்டம் என்ற பெயரில் பிரிந்திருந்த குடும்பங்கள் அத்தனையும் ஒன்றாய் மாரி குதூகலம் இன்றி போனாலும் குடும்பத்தோடு வாழும் நிலையை…
ஆடி ஓடி விளையாடிய கால்களை கட்டி போட்டு கோரோன வந்து நம்மை ஒன்று சேர்த்தது ஊரடங்குச்சட்டம் என்ற பெயரில் பிரிந்திருந்த குடும்பங்கள் அத்தனையும் ஒன்றாய் மாரி குதூகலம் இன்றி போனாலும் குடும்பத்தோடு வாழும் நிலையை…