மரணம் மறந்த மாந்தராய்
- by admin
- 11
யாம் விடும் எம் சுவாசம்
எம் மண்ணறைக்கான வாசம்
யாம் கடக்கும் நாழிகைகள்
எம் மரணத்திற்கான நாட்குறிப்பு
யாம் கொண்டாடும் ஜனனதினம்
எம் நினைவு தினம் நோக்கிய
வருடாந்த விரைதல்
யாம் எடுத்தியம்பும் பாதச்சுவடுகள்
எம் மண்ணறை நோக்கிய நகர்வு
யாம் கண்ணயர்ந்து துயிலும் தருணம்
எம் மரண ஒத்திகை
பூமாதேவியின் வயிற்றில் யாம்
பூத்திட்ட கணம் தொட்டு
பூமிக்குள் மண்ணாய் அடங்கி
புண்ணாகி
மண்ணுக்கிரையாகி
மக்கி விடும் கணம் வரை
மறந்தே மகிழ்கிறோம்
மரணமெனும் தூதை
வாழும் காலம் கொஞ்சமே
வாழ்வோம் கலிமா சொல்லியே
வானவர் வருகை எண்ணியே
வாகாய் கண்கள் மூடிட.
ஷீபா இப்றாஹீம் (ஹுதாஇய்யாஹ்)
B.A (Hons) Ⓡ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.
யாம் விடும் எம் சுவாசம் எம் மண்ணறைக்கான வாசம் யாம் கடக்கும் நாழிகைகள் எம் மரணத்திற்கான நாட்குறிப்பு யாம் கொண்டாடும் ஜனனதினம் எம் நினைவு தினம் நோக்கிய வருடாந்த விரைதல் யாம் எடுத்தியம்பும் பாதச்சுவடுகள்…
யாம் விடும் எம் சுவாசம் எம் மண்ணறைக்கான வாசம் யாம் கடக்கும் நாழிகைகள் எம் மரணத்திற்கான நாட்குறிப்பு யாம் கொண்டாடும் ஜனனதினம் எம் நினைவு தினம் நோக்கிய வருடாந்த விரைதல் யாம் எடுத்தியம்பும் பாதச்சுவடுகள்…