ஆன்மாவின் அமைதி
- by admin
- 19
புளகமும் புல்லரிப்பும்
உணரமுடியா நிஷ்டை
கலந்த தவத்தை
உறக்கம் என்று
விசும்பிக் கொண்டிருக்கிறது
விடியல்
அர்த்தம் புரியா
தனிமையின் அரும்புகளை
காலச்சுவடுகள்
வரைந்து கொண்டிருக்கிறது.
இருள் வடியும் ஓர் போதையில்
உயிர் கொண்டு தளைகிறது
மௌனம்.
தீர்ந்து போன ஓர் ஆன்மாவின்
அமைதி கலந்த ஒற்றை நிழல்
பிரக்ஞையின் மயக்கத்தில் ஊர்ந்து
தீயின் மௌனக் குரலாய்
தேகம் தொட்டு விம்முகிறது.
பௌர்ணமியை
தரிசித்துக் கொண்டிருக்கும்
சந்தன மடல்கள்
செத்துக் கிடக்கும்
சங்கீத வார்த்தைகளை
மயிலிறகால்
வருடிக் கொண்டிருக்கிறது.
மிஸ்ரா ஜப்பார்
புளகமும் புல்லரிப்பும் உணரமுடியா நிஷ்டை கலந்த தவத்தை உறக்கம் என்று விசும்பிக் கொண்டிருக்கிறது விடியல் அர்த்தம் புரியா தனிமையின் அரும்புகளை காலச்சுவடுகள் வரைந்து கொண்டிருக்கிறது. இருள் வடியும் ஓர் போதையில் உயிர் கொண்டு தளைகிறது…
புளகமும் புல்லரிப்பும் உணரமுடியா நிஷ்டை கலந்த தவத்தை உறக்கம் என்று விசும்பிக் கொண்டிருக்கிறது விடியல் அர்த்தம் புரியா தனிமையின் அரும்புகளை காலச்சுவடுகள் வரைந்து கொண்டிருக்கிறது. இருள் வடியும் ஓர் போதையில் உயிர் கொண்டு தளைகிறது…