கொஞ்சிடுமா?

  • 9

காட்டிலே வீட்டைக் கட்டி
காடையும் அழித்துப் போட்ட
காடையர் கூட்டமாய் நாமிருக்க
கொஞ்சிடுமா யானைகளும்

வளவுக்குள் புகுந்து
வெண்டிக்காய் வட்டக்காயென
விளைச்சல் செய்த அத்தனையும்
வீணாக்கிவிட்டுச் செல்வது
வீரத்தை காட்டவல்ல
விவரிக்க முடியா கவலையை
வடுக்களாய் தந்திடவே

தன் இடத்தை பிடித்துக் கொண்டு
தண்ணீரையும் நாசமாக்கின்
தழைக்கும் தானே கோவமும்
தரணியில் வாழ முடியாதென்று

யானை மனித மோதல்
அடுக்கிக் கொண்டே செல்கிறது
எல்லாம் எங்கள் பிழைகளால் தான்
அறிந்து அறிவாய் நடந்திடுவோம்

BindhAmeen 
Seusl

காட்டிலே வீட்டைக் கட்டி காடையும் அழித்துப் போட்ட காடையர் கூட்டமாய் நாமிருக்க கொஞ்சிடுமா யானைகளும் வளவுக்குள் புகுந்து வெண்டிக்காய் வட்டக்காயென விளைச்சல் செய்த அத்தனையும் வீணாக்கிவிட்டுச் செல்வது வீரத்தை காட்டவல்ல விவரிக்க முடியா கவலையை…

காட்டிலே வீட்டைக் கட்டி காடையும் அழித்துப் போட்ட காடையர் கூட்டமாய் நாமிருக்க கொஞ்சிடுமா யானைகளும் வளவுக்குள் புகுந்து வெண்டிக்காய் வட்டக்காயென விளைச்சல் செய்த அத்தனையும் வீணாக்கிவிட்டுச் செல்வது வீரத்தை காட்டவல்ல விவரிக்க முடியா கவலையை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *